அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது தொற்று விகிதம்

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது தொற்று விகிதம்

2 mins read
62807e57-3063-47d5-8922-8e77ea3cc035
-

தமிழகத்தில் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் நன்கு குறைந்து வரு­கிறது.

மாநி­லத்­தின் எந்த மாவட்­டத்­தி­லும் தொற்று பாதிப்பு விகி­தம் 15 விழுக்­காட்­டுக்கு மேல் இல்லை என மாநி­லச் சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

மே மாதம் அன்­றா­டம் பாதிக்­கப்­படும் புது நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 33 ஆயி­ர­மாக இருந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் அது ஒன்­ப­தா­யி­ர­மாக குறைந்­தது.

அதிக பாதிப்­புள்ள மாவட்­டங்­க­ளின் பட்­டி­ய­லில் கோவை தொடர்ந்து முதல் இடத்­தில் இருந்து வரு­கிறது. ஈரோடு, சேலம், சென்னை, திருப்­பூர், செங்­கல்­பட்டு, நாமக்­கல் ஆகி­யவை அடுத்­த­டுத்த இடங்­களில் உள்­ளன.

தென் மாவட்­டங்­க­ளைப் பொறுத்­த­வரை மது­ரை­யில் தற்­போது 2,827 பேர் மட்­டுமே மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அங்கு அன்­றாட தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 1,700இல் இருந்து இப்­போது 164ஆக குறைந்­துள்­ளது. மேலும் குண­ம­டை­வோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது.

இதே நிலை நீடித்­தால் ஜூன் மாத இறு­திக்­குள் தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் முற்­றி­லும் கட்­டுக்­குள் வரும் என மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் தமி­ழ­கத்­தில் 8,633 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. 287 பேர் மாண்­டு­விட்­ட­னர். அதே­ச­ம­யம் நேற்று முன்­தி­னம் 19,860 பேர் கிருமி தொற்­றில் இருந்து முழு­மை­யாக மீண்­டுள்­ள­னர்.

மேலும் நான்கு சிங்­கங்­க­ளுக்கு கொரோனா தொற்று

சென்னை அருகே உள்ளே வண்­ட­லூர் உயி­ரி­யல் பூங்­கா­வில் மேலும் நான்கு சிங்­கங்­க­ளுக்கு கொரோனா டெல்டா தொற்றின் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே இப்­பூங்­கா­வில் உள்ள 13 ஆசிய வகை சிங்­கங்­க­ளுக்கு கொரோனா தாக்­கத்­துக்­கான அறி­கு­றி­கள் இருப்­பது கடந்த 3ஆம் தேதி கண்­ட­றி­யப்­பட்­டது. அதன் பின்­னர் நீலா என்ற ஒன்­பது வயது பெண் சிங்­கம் உயி­ரி­ழந்­தது.

இதை­ய­டுத்து பத்­ம­நா­பன் என்ற 12 வயது ஆண் சிங்­கம் உயி­ரி­ழந்த நிலை­யில், மேலும் இரு பெண் சிங்­கங்­கள் கவ­லைக்­கி­ட­மாக உள்­ளன. அவற்­றுக்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், விலங்­கு­க­ளுக்கு ஏற்­படும் கொரோனா கிரு­மித்­தொற்றை தடுக்க தமி­ழக அரசு சிறப்பு பணிக்­குழு ஒன்றை அமைத்­துள்­ளது.

புது­வை­யில் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டால் ரொக்­கப் பரிசு

புது­வை­யில் கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொண்­டால் ரொக்­கப்­ப­ரிசு அளிக்­கப்­படும் என்ற அர­சின் அறி­விப்­புக்கு நல்ல பலன் கிடைத்­துள்­ளது.

அங்கு கடந்த 16ஆம் தேதி முதல் தடுப்­பூசி திரு­விழா என்ற பெய­ரில் கொரோனா தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை முடுக்­கி­வி­டப் பட்­டுள்­ளது.

தின­மும் ஊசி போட்­டுக் கொண்­ட­வர்­களில் 25 அதிர்ஷ்­ட­சா­லி­கள் குலுக்­கல் முறை­யில் தேர்வு செய்­யப்­பட்டு ரொக்­கப்­ப­ரிசு அளிக்­கப்­ப­டு­கிறது.

இதற்கு பொது­மக்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.