சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு; சிகிச்சை

சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு; சிகிச்சை

2 mins read
67cb782e-e1cf-4369-82d1-93999917f18c
-

சென்னை: பாலி­யல் வழக்­கில் சிக்கி உள்ள சிவ­சங்­கர் பாபா (படம்) சென்னை அரசு பொது மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து வரப்­பட்ட நிலை­யில் அங்கு அவ­ருக்கு முழு உடல் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அவ­ரது பெண் சீடர் சுஷ்­மிதா கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

சென்­னையை அடுத்­துள்ள கேளம்­பாக்­கம் பகு­தி­யில் ஆசி­ர­மம் அமைத்­துள்ள 78 வய­தான சிவ­சங்­கர் பாபா பள்­ளிக்­கூ­டம் ஒன்­றை­யும் நடத்தி வரு­கி­றார்.

இப்­பள்­ளி­யில் படித்த மாண­வி­க­ளுக்கு அவர் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. மூன்று முன்­னாள் மாண­வி­கள் அளித்த புகா­ரின்­பே­ரில் தமி­ழக போலி­சார் அவ­ரைக் கைது செய்­துள்­ள­னர்.

மேலும் தற்­போது வெளி­நா­டு­களில் வாழும் முன்­னாள் மாண­வி­கள் சில­ரும்­கூட அவர் மீது புகார் அளிக்க முன­வந்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இந்­நி­லை­யில் வட இந்­தி­யா­வுக்­குத் தப்­பிச் சென்ற அவரை டெல்­லி­யில் வைத்து போலி­சார் கைது செய்­த­னர்.

பின்­னர் தமி­ழ­கம் அழைத்து வரப்­பட்ட சிவ­சங்­கர் பாபா செங்­கல்­பட்டு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். அங்­குள்ள மருத்­து­வர்­க­ளின் பரிந்­து­ரை­யின்­பே­ரில் சென்னை அரசு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து வரப்­பட்­டார். முன்­ன­தாக செங்­கல்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­போது அவ­ருக்கு மார­டைப்­பு­ ஏற்பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் மாண­வி­க­ளி­டம் ஆசை காட்டி, மிரட்டி சிவ­சங்­கர் பாபா­வின் ஆசைக்கு இணங்க வைத்த புகாரின் பேரில் பெண் சீடர் சுஷ்­மிதா கைது செய்­யப்­பட்­டுள்­ளார். மேலும் சிவ­சங்­கர் பாபா நடத்தி வந்த பள்­ளி­யில் ஆசி­ரி­யை­யாக இருந்த ஒரு­வ­ரும் கைதாகி இருப்­ப­தா­கத்­ தெ­ரி­கிறது.

தமது பள்ளியில் ரக­சிய சொகுசு அறையை சிவ­சங்­கர் பாபா நிர்­மா­ணித்­தி­ருந்­த­தாகவும் அதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் 'வெப் துனியா' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுஷ்­மிதா அந்­தப் பள்­ளி­யின் முன்­னாள் மாணவி என்றும் கூறப்­படு­கிறது.