சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்களப் பெண் பணியாளர் மீது மரம் ஒன்று திடீரென்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி தரணி, 27.
இவர், கடந்த ஆண்டு முதல் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று கிருமித்தொற்று உள்ளதா என்பது குறித்து கணக்கெடுத்து வந்தார்.
கடந்த 5ஆம் தேதி இதுபோல் நந்தம்பாக்கம் பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தபோது, சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து தரணி மீது விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த தரணியை மீட்டு சென்னை அரசுப் பொது மருத் துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் தரணி உயிரிழந்தார்.
இதுகுறித்து, நந்தம்பாக்கம் போலிஸ் அதிகாரி சாலைராம் சக்திவேல் விசாரணை நடத்தி வருகி றார்.
தரணிக்கு ராகுல், 9, என்ற மகனும் கவிதா, 8, என்ற மகளும் உள்ளதால், ஒப்பந்த அடிப்படையில் இருந்தாலும் தரணிக்கும் முன்களப் பணியாளர்களுக்கான சலுகைகளை அரசு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

