நீரிழிவு, இதயப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு

நீரிழிவு, இதயப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு

2 mins read
fc2c5804-9851-4d03-b872-6f1660b3fbce
-

சென்னை: 60 வய­தைக் கடந்த நீரி­ழிவு நோய், இத­யப் பிரச்­சினை, உடல் பரு­ம­னு­டன் உள்ள மூத்­தோர்­க­ளி­டையே கொரோனா பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் அவர்­களின் வீடு­க­ளுக்கே சென்று தடுப்பு மருந்­து­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வருவதாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

'ஹலோ எஃப்­எம்' வானொ­லி­யில் நேற்று காலை ஒலிபரப்­பான 'ஸ்பாட்­லைட்' நிகழ்ச்­சி­யில் பேசிய அைமச்­சர், "கொரோனா இரண்­டா­வது அலை கட்­டுப்­பாட்­டுக்­குள் வந்­துள்­ள­தற்கு மக்­க­ளின் ஒத்­து­ழைப்பே முக்­கிய கார­ணம்," என்று பாராட்டு தெரிவித்தவர், "மூன்­றா­வது அலையை எதிர்­கொள்­ள தமி­ழ­கம் தயார்நிலை­யில் உள்­ளது. அதற்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் 80% அள­வுக்கு ஏற்கெனவே நிறை­வேற்­றப்­பட்டு உள்­ளன.

"இந்தத் தொற்றுப் பிரச்சினை முடிந்த பிறகு மருத்­து­வத்­து­றை­யில் நடந்த முறை­கே­டு­கள் குறித்தும் முன்­னாள் அமைச்­சர்­கள் மீதான ஊழல் புகார்­கள் குறித்­தும் நட­வடிக்கை எடுக்­கப்­படும்," என்­று அவர் தெரி­வித்­தார்.

8,183 பேருக்குப் பாதிப்பு; 18,000 பேர் குணம்

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் மேலும் 8,183 பேர் கிருமித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யானதாக­வும் இத்தொற்றில் இருந்து மேலும் 18,232 பேர் குணமடைந்­துள்­ள­னர் என்­றும் மாநில சுகா­தா­ரத்­துறை அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

இது­வரை இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 24,14,680 பேராக உயர்ந்­துள்­ளது. இவர்­களில் 23,04,885 பேர் குண­மடைந்து வீடு திரும்­பி­யுள்­ளனர் என்றும் தெரி­வித்­துள்­ளது.

கிருமி பாதிப்பு குறைந்தாலும் தின­சரி உயி­ரி­ழப்பு குறை­யா­மல் 200க்கும் அதி­க­மாக இருந்த நிலை­யில், தற்­போது ஒரே நாளில் 180 பேர் உயி­ரி­ழந்­துள்ளனர். மொத்த உயி­ரி­ழப்பு 31,015 ஆக அதி­க­ரித்­துள்­ளது.