சென்னை: தமிழகத்தில் இன்று 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா கிருமிப் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களுக்குள் அனைத்து வகை கடைகளையும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இடையே 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்களும் 50% பயணிகளுடன் இயக்கப்பட உள்ளன.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களை மூன்று வகையாகப் பிரித்து, இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அரசு அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.
வகை 1- (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.
தொற்று பாதிப்பு அதிகமுள்ள இந்த 11 மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் இல்லை, தற்போதைய நிலையே தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள்.
இம்மாவட்டங்களில் பலசரக்கு, இறைச்சி, மீன், காய்கறிகள், பழம், பூ விற்பனை உள்ளிட்ட அைனத்துக் கடைகளும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். உண வகங்களில் 'பார்சல்' சேவை காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும்.
அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகளும் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாவது பிரிவாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் கிருமித்தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதால், குளிர்சாதன வசதியில்லாத பேருந்து களில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மெட்ரோ ரயில் போக்குவரத்திலும் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரு பயணிகளும் பயணம் செய்யலாம்.

