ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆணை வெளியீடு

ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆணை வெளியீடு

1 mins read
f776a275-00bb-4469-b8cd-2d534cd6010d
-

சென்னை: அர­சிற்­குத் தகுந்த ஆலோ­ச­னை­களை வழங்­கிட 'முதல்­வ­ருக்­கான பொரு­ளா­தார ஆலோ­ச­னைக் குழு'வை அமைத்து மாநில அரசு ஆணை பிறப்­பித்து உள்­ளது.

இது­கு­றித்து அரசு வெளி­யிட்டு உள்ள அர­சா­ணை­யில், "கொவிட்-19 தாக்­கம் கார­ண­மாக தமி­ழ­கத்­தின் பொரு­ளா­தா­ரத்­தில் பெரும் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது. அர­சின் வரு­வாய், நிதி பற்­றாக்­குறை, அதி­க­ள­வி­லான கடன் சுமை ஆகி­யவை தொடர்ந்து ஆபத்­தான நிலையை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

"அதே­நே­ரத்­தில் பொரு­ளா­தா­ரத் தில் தமி­ழக அரசு விரைந்து வளர்ச்­சியை எட்­டி­வி­டும் என்ற எதிர்­பார்ப்­பு­டன் மக்­கள் உள்­ள­னர்.

"இந்­நி­லை­யில், இப்­பி­ரச்­சினை களை எதிர்­கொண்டு, மாநி­லத்­தில் வளர்ச்­சியை அதி­க­ரிக்க 'முதல்­வ­ருக் கான பொரு­ளா­தார ஆலோ­ச­னைக் குழு' அமைக்­கப்­பட்­டுள்­ளது.

"இக்­கு­ழு­வில் உல­க­ள­வில் புகழ்­பெற்ற ஐந்து பொரு­ளா­தார வல்­லு­நர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

"பொரு­ளா­தா­ரம், சமூக நீதி, மனித மேம்­பாடு தொடர்­பான பிரச்­சி­னை­கள், பெண்­க­ளுக்­குச் சம வாய்ப்­பு­களை உறுதி செய்­வது உள்ளிட்ட விஷயங்­களில் பொது­வான வழி­காட்டுதல்­களை இந்­தக் குழு வழங்­கும்.

"மாநி­லத்­தில் பொரு­ளா­தார வளர்ச்சி, வேலை­வாய்ப்பு, உற்­பத்­தித் திறனை அதி­க­ரிப்­பது குறித்த யோச­னை­க­ளையும் மாநிலத்­தின் ஒட்­டு­மொத்த நிதிநிலையை மேம்­படுத்­து­வ­தற்­கான வழி­காட்­டு­தல்­களையும் இக்­குழு வழங்­கும்," என்று தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்,

நோபல் பரிசு வென்ற பொரு ளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ,

முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரெஸ்,

முன்னாள் மத்திய நிதித் துறை செயலாளர் எஸ். நாராயண் ஆகியோர்.

படம்: ஊடகம்