சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று (ஜூன் 23) இரண்டாவது நாளாக நடைபெற்றது.
அப்போது, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் 'நீட்' தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து பதிலளித்தார். "தமிழகத்திற்கு 'நீட்' விலக்கு வேண்டும் என்பதில் ஆளும் கட்சி உறுதியாக இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. மேலும், 'நீட்' விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
"அனைத்துத் தரப்பும் 'நீட்' விலக்குக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் இதற்கு பாஜக ஆதரவுக்குரல் கொடுக்கத் தயாரா," என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், "சட்டத்திற்கு உட்பட்டு அது நடக்குமானால் நாங்கள் ஆதரவு தருகிறோம்," எனக் கூறினார்.

