சென்னை: அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் ேததி முதல் பேருந்தில் மாற்றுத் திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள், திருநங்கைகளும் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்த குமாரி கூறியபோது, "எங்களுடைய நீண்டநாள் கோரிக்கை இது. இலவச பேருந்துப் பயணம் என்பது எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கு பேருதவியாக இருக்கும், தமிழக அரசுக்கு நன்றி," என்று நெகிழ்ந்துள்ளார்.

