'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' என அதிமுக குறித்து விமர்சனம்

1 mins read
454f8868-8480-4030-a045-ff28cd00b8c9
-

சென்னை: ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீதான விவா­தத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பதி­ல­ளித்து ேநற்று பேசு­கை­யில், "நடு­வுல கொஞ்­சம் பக்­கத்த காணோம்' என்ற திரைப்­படம் போல் பிப்­ர­வரி 26 முதல் மே 6 வரை தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அதி­முக மறந்­து­விட்­டதா? மார்ச் முதல் மே 7ஆம் தேதி வரை ஏற்­பட்ட கொரோனா பாதிப்பு களுக்கு அதி­மு­கவே கார­ணம்," என்று குற்­றம்­சாட்­டினார்.

"திமுக ஆட்­சிக்கு வந்­த­போது தடுப்­பூசி, உயிர்­வாயு பற்­றாக்­குறை என பல பிரச்­சி­னை­க­ளால் அல்லா டும் நிலை இருந்­தது. ஆனால், கடந்த ஒரு மாதத்­திற்­குள்­ளாக அனைத்து வச­தி­களும் கிடைக்­கும் வகை­யில் நட­வ­டிக்கைகளை எடுத்துள்ளோம்," என்றார்.

"கடந்த அதி­முக ஆட்­சி­யில் கருத்து சுதந்­தி­ரத்தைப் பறிக்­கும் வகை­யில் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் மீது பதிவு செய்­யப்­பட்ட வழக்கு கள் திரும்­பப் பெறப்­படும். எட்டு வழிச்­சாலை, மீத்­தேன், நியூட்­ரினோ திட்­டத்­துக்கு எதி­ரா­கப் போராடி யவர்­கள் மீதான வழக்­கு­களும் திரும்­பப் பெறப்­படும்," என்­றார்.