தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர்: கோவையைக் கண்டு மக்கள் வியக்கும் காலம் வரும்

2 mins read
03c7590e-3bce-4e51-aa7c-e70f1f79b38c
-

சென்னை: தமி­ழ­கத்­தின் மேற்கு மாவட்­ட­மான கோவையை நாங்­கள் எந்தவிதத்­தி­லும் புறக்­க­ணிக்க வில்லை. வருங்காலத்தில் மக்கள் வியப்படையும் வகையில் இன்னும் அங்கு அதி­க­மான நவீன மேம்பாடு களைச் செய்­யவுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

"டெல்­லி­யில் பிர­த­ம­ர் மோடியைச் சந்­தித்து மனு அளித்தபோது­கூட கோவை­யில் எய்ம்ஸ் மருத்­துவ மனையை அமைப்பதற்கு கோரிக்கை விடுத்­துள்­ளோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.

சட்டமன்றத்தில் பாஜக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நயினார் நாகேந்திரன் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.

திமுக தலைமையிலான அரசு எல்லோருக்குமான அரசு என ஆளுநர் உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்படிக் கூறினாலும் மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டத் திட்டத்தில் கோவை நகரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த நகரத்தைப் புறக்கணிக்க வேண்டும்? என்று நயி­னார் நாகேந்­தி­ரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதல்­வர், "அவை­யில் தவ­றான கருத்­துகளைக் கூறவேண்­டாம். கோவையை எந்தக் கார­ணம் கொண்­டும் புறக்­க­ணிக்க மாட்­டோம். இன்னும் அங்கு அதிகமாக பணிகளைச் செய்வோம். அனை வரும் ஏற்றுக்கொள்ளும் வகை யில் எங்களது பணிகள் அமையும்.

"மக்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்தார் கள் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருகிறோம். அனை வருக்குமான அரசாக திமுக அரசு திகழும்," என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

எங்களுக்கு வாக்களித்தவர்கள் பெருமையும் வாக்களிக்காதவர்கள் வருத்தமும் அடையவேண்டும் என்பதே எங்களது கொள்கை. கோவையை எவ்விதத்திலும் புறக்கணிக்கவில்லை. மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்னும் அதிகமான பணிகளை அங்கு செய்ய உள்ளோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்