குழந்தை விரல் துண்டிப்பு; ரூ.75,000 வழங்க உத்தரவு

குழந்தை விரல் துண்டிப்பு; ரூ.75,000 வழங்க உத்தரவு

1 mins read
a0e33c17-2733-426d-9544-9e3f471ed497
-

மதுரை: தஞ்­சா­வூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் பிறந்து 14 நாள்­களே ஆன பெண் குழந்­தை­யின் கட்டை விரல் துண்­டிக்­கப்­பட்ட விவ­கா­ரம் தொடர்­பில், பெற்­றோ­ருக்கு இடைக்­கால நிவா­ர­ண­மாக ரூ.75,000 வழங்­கும்­படி தமி­ழக அர­சுக்கு சென்னை உயர் நீதி­மன்ற மது­ரைக் ­கிளை புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டது.

அத்­து­டன், அறுவை சிகிச்சை மூலம் குழந்­தை­யின் கையில் கட்டை விரலை மீண்­டும் பொருத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று உத்­த­ர­விட்ட நீதி­ப­தி­கள், இந்த வழக்கு விசா­ர­ணையை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்­த­னர்.

தஞ்­சா­வூ­ரைச் சேர்ந்த கணே சன் தாக்­கல் செய்த மனு­வில், என் மனை­விக்கு தஞ்­சா­வூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் மே 25ஆம் தேதி பெண் குழந்தை பிறந்­தது. மருத்­து­வ­ம­னை­யில் ஜூன் 7ஆம் தேதி குழந்­தை­யின் கையில் இருந்த ஊசியை எடுத்­த­போது குழந்­தை­யின் இடது கை கட்டை விரல் துண்­டிக்­கப் ­பட்டது. எனவே, கவ­னக்­கு­றை­வாகச் செயல்­பட்ட தாதி­யர் மீது சட்­டப்­படி நடவடிக்கை எடுக்­க­வும் உரிய இழப்­பீடு வழங்­க­வும் அறுவை சிகிச்சை மூலம் என் குழந்­தை­யின் கட்டை விர­லைப் பொருத்­த­வும் உத்­த­ர­விடவேண்­டும் எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.