சென்னை: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) பணம் நிரப்பும் வசதி கொண்ட ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநில கும்பல் தலைவன் அமீர் அர்ஷிடம், 37, போலிசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
வியாழனன்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அமீரிடம் தனிப்படை போலிசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அமீர், பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வாக்குமூலமாகக் கூறியுள்ளார்.
"இதே வங்கியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களின் உதவி யுடன்தான் நாங்கள் இக்கொள்ளை யில் துணிந்து இறங்கினோம்.
"தமிழகம் முழுவதும் ஏறக்குறைய ரூ.1 கோடி வரை கொள்ளை அடித்துள்ளோம்.
"ஹரியானா மாநிலம், பல்லப்கர் நகரில் வசித்து வந்த என்னிடம் வறுமை காரணமாக பட்டம், பட்டயப் படிப்பு படித்துள்ள இளைஞர்கள் பணிபுரிந்து வந்தனர்.
"நான்தான் கொள்ளைக் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தேன். எங்கள் நண்பர்களில் சிலர் எஸ்பிஐ வங்கியில் தொழில் நுட்பப் பிரிவில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர்.
"இதைத்தொடந்து, எஸ்பிஐ வங்கியின் 'டெபாசிட்' இயந்திரங்களில் கொள்ளையடிக்கும் நுணுக் கம் எங்களுக்குத் தெரியவந்தது.
"இதுகுறித்து எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம்.
"கொள்ளையடித்த பணத்தில் 30% எனக்கு; 70% மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடுவேன்.சென்னைக்கு ஐந்து குழுக்களாக 10 பேர் ரயிலில் வந்தோம். 'கூகல் மேப்' உதவியுடன் 'மொபைல் ஆப்' வாயிலாக அறை எடுத்து தங்கி னோம். அதன்பின்னர், இருவர் வீதம் பிரிந்து கொள்ளையடித்து விட்டு விமானம், ரயில், வட மாநிலம் செல்லும் சரக்கு வாகனத்தில் தப்பிவிடுவது திட்டம். அதன்படி, நால்வர் மட்டும் தப்பிச்சென்றோம்," என்று கூறியுள்ளார்.
அமீரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைக்க இருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

