23 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவதற்கு வலியுறுத்து நகை, ஜவுளிக்கடை திறக்க கோரிக்கை

23 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவதற்கு வலியுறுத்து நகை, ஜவுளிக்கடை திறக்க கோரிக்கை

2 mins read
80b5ee4d-ab16-4c37-b789-f4208a1dd6dd
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ஊர­டங்கை மேலும் நீட்­டிப்­பது, கூடு­தல் தளர்­வு­கள் அளிப்­பது குறித்து மருத்­துவ நிபு­ணர்­கள், சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

மாநி­லத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில் சென்னை, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­களில் மட்­டும் பேருந்து சேவைக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கிருமி பாதிப்பு குறைந்து வரும் 23 மாவட்­டங்­களி­லும் பேருந்­துப் போக்­கு­வ­ரத்­தைத் தொடங்க அனு­ம­திக்­கும்­படி கோரிக்கை எழுந்­துள்­ளது.

இதைத்­தொ­டர்ந்து, மீண்­டும் பேருந்து போக்­கு­வ­ரத்து தொடங் கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத்­து­டன் மாவட்­டம் விட்டு மாவட்­டம் செல்­லும் பேருந்­து­களுக்கு சில கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­படும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அனைத்து சமய வழி­பாட்­டுத் தலங்­க­ளி­லும் தரி­ச­னத்­திற்கு அனு­மதி வழங்­கப்­படும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே பெரும்­பா­லான கடை­கள் திறக்­கப்­பட்­டுள்ள நிலை யில் ஜவு­ளிக்­கடை, நகைக்­க­டை­களைத் திறப்­பது குறித்­தும் ஆலோ­சனை நடந்­துள்­ள­தா­வும் இந்­தக் கடை­க­ளுக்­கும் அனு­மதி கிடைக்­க­லாம் என்­றும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

ஆனா­லும் கொரோனா மேலும் அதி­க­ரித்­து­வி­டா­மல் தடுப்­ப­தற்கு பல முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை களைத் தொடர்­வ­தும் முக்­கி­யம் என்று மருத்­து­வக் குழு­வி­னர் ஆலோ­சனை வழங்கி உள்­ள­னர்.

இந்த ஆலோ­சனை குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு இன்று அல்­லது நாளை தெரி­ய­வ­ரும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் நேற்­றைய நில­வ­ரப்­படி அன்­றாட தொற்று பாதிப்பு 6,162 ஆக­வும் பலி எண்­ணிக்கை 155 ஆக­வும் இருந்­தது.

மதுரையில் இருந்து வெளிநாட்டு விமான சேவை

கொரோனா கட்டுப்பாடுகளுடன் வரும் ஒன்றாம் தேதி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து வெளி நாட்டிற்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டுச் சேவை கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் மதுரை விமான நிலை யத்திலிருந்து மீண்டும் துபாய்க்கு விமானச் சேவை தொடங்கவுள்ள தாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.