அமைச்சர்: 'டெல்டா பிளஸ்' தொற்றால் மூவர் பாதிப்பு

அமைச்சர்: 'டெல்டா பிளஸ்' தொற்றால் மூவர் பாதிப்பு

1 mins read
2276a344-fe75-4007-8adc-d2c971293efe
-

சென்னை: தமி­ழ­கத்­தில் மூவ­ருக்கு 'டெல்டா பிளஸ்' கொரோனா தொற்று உறு­தி­யாகி இருப்­ப­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பிர மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

மாநி­லத்­தில் கொரோனா இரண்­டாம் அலை­யின் தாக்­கம் படிப்­ப­டி­யாக ஓய்ந்து வரு­வ­தால் மக்­கள் நிம்­மதி அடைந்­துள்­ள­னர். இந்­தச் சூழ்­நி­லை­யில், புதி தாக பர­வி­வ­ரும் 'டெல்டா பிளஸ்' கிரு­மித்ெ­தாற்று மூன்­றாம் அலைக்கு கார­ண­மா­க­லாம் என எய்ம்ஸ் மருத்­து­வ­மனை எச்­ச­ரித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் மகா­ராஷ்­டிரா, மத்­தி­யப் பிர­தே­சம், கர்­நா­டகா, கேரளா ஆகிய மாநி­லங்­களில் இந்த 'டெல்டா பிளஸ்' கொரோனா உறு­தி­யாகி உள்­ளது. தமி­ழ­கத்­தி­லும் ஒரு­வ­ருக்கு இந்த பாதிப்பு உறு­தி­யா­னது.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர் களைச் சந்­தித்த அமைச்­சர், "தமி­ழ­கத்­தில் கொரானா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்களின் சளி, எச்­சில் மாதி­ரி­கள், பெங்­க­ளூருவில் உள்ள ஆய்வு மையத்­திற்கு அனுப்­பப்­பட்­டது. மொத்தம் 1,100 மாதி­ரி­களில் மூவருக்கு 'டெல்டா பிளஸ்' பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்­ளது.

"சென்னை கொரட்­டூர் பகுதி, காஞ்­சி­பு­ரம், மது­ரை­யைச் சேர்ந்த மூவர் பாதிக்­கப்­பட்டு இருப்ப தாக அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார். அவர்­க­ளு­டன் தொடர்­பு­டையவர்­க­ளுக்கு நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­களில் யாருக்­கும் தொற்று ஏற்­ப­ட­வில்லை," எனவும் அவர் கூறினார்.