மாணவர்களுக்காக வீதியில் தண்டோரா போட்ட ஆசிரியர்

மாணவர்களுக்காக வீதியில் தண்டோரா போட்ட ஆசிரியர்

1 mins read
0d2e2ddc-a6e6-4a25-9d43-bed2b040224f
தண்­டோரா போடும் தலைமை ஆசிரியர் வா. ரவிச்சந்திரன். படம்: தமிழக ஊடகம் -

திருச்சி: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வ­ல் காரணமாக பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்ள நிலை­யில், மாணவர்கள் தங்கள் படிப்பில் பின்தங்கி விடாமல் இருக்க ­தண்­டோரா போட்டு ஊக்­க­மூட்டி வருகி ­றார் தலைமை ஆசி­ரி­யர் ஒரு­வர்.

திருச்சி மாவட்­டம், உப்­பிலியா புரம் அருகே உள்ள வெங்­கடா சல­பு­ரம் ஊராட்சி ஒன்­றிய அரசு நடு­நி­லைப்­பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­ய­ராக உள்­ளார் வா.ரவிச் சந்­தி­ரன். தமி­ழக அர­சின் நல்லாசிரி­யர் விரு­தைப் பெற்­ற­வர்.

ரவிச்சந்திரன், தான் பணி­பு­ரி­யும் பள்ளியைச் சுற்­றி­யுள்ள கிரா­மங்­களில் தண்­டோரா போட்டு மாண­வர், பெற்­றோ­ருக்­கு அறி­விப்பு களை விடுத்து வரு­கி­றார்.

"மாண­வர்­க­ளுக்­காக கல்­வித் தொலைக்­காட்சி தொடங்­கப்­பட்டு உள்­ளது. இதில், வகுப்­பு­கள் நடை பெறும் அட்­ட­வ­ணை­யும் உள்­ளது. எனவே, வீட்­டில் இருக்­கும் மாண வர்­கள் கல்­வித் தொலைக்­காட்­சி­யைத் தொடர்ந்து பார்த்து பயன்பெற வேண்டும். பெற்­றோரும் மாண­வர்­களை ஊக்கப்படுத்தவேண்டும்," என்று அறி­வித்­த­ப­டியே செல்­கி­றார்.

"பள்­ளி­கள் திறக்­கப்­ப­டாத நிலை­யில், மாணவர்களின் படிப்பு தடை­படக் கூடாது என்­ப­தற்­காகவே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தி வருகி றேன். இதற்கு கிராம மக்­கள் நல்ல ஒத்­து­ழைப்பு அளித்து வருகின்­ற­னர்," என்­றார்.