சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ள இக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்குத் தயாராகும்படி கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது 3.7%ஆக இருந்த மநீமவின் வாக்கு வங்கி, சட்டமன்றத் தேர்தலின்போது 2.45% ஆகக் குறைந்தது.
அதன்பின்னர், தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், முக்கிய நிர்வாகிகளான முருகானந்தம், சி.கே.குமரவேல், சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் கட்சியிலிருந்து வெளியேறினர்.
இவர்கள் அனைவரும், தோல்விக்கு முக்கிய காரணம் கமல்ஹாசன்தான் என்ற குற்றச்சாட்டையும் கூறிவிட்டுச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, "கட்சியை சீரமைப்பேன். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்," என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று காலை இணையவழியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "மண், மொழி, மக்களைக் காக்க களமிறங்கிய மநீம கட்சியை வலுப்படுத்த சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன்.
"கட்சித் தலைவர் என்ற பொறுப்புடன் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பையும் கூடுதலாக நான் ஏற்றுச் செயல்பட உள்ளேன். பழ.கருப்பையா, ெபான்ராஜ் ஆகியோர் அரசியல் ஆலோசகர்களாகவும் ஏ.ஜி.மௌரியா- துணைத் தலைவர் (கட்டமைப்பு), தங்கவேலு - துணைத் தலைவர் (களப்பணி, செயல்படுத்துதல்) உள்ளிட்ட ஒன்பது பேரை நியமித்துள்ளேன்," என்று தெரிவித்தார்.

