வழிபாட்டுத் தலங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதி 27 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு

வழிபாட்டுத் தலங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதி 27 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு

3 mins read
99413262-2f2a-4d84-b6ed-5e007f3dc00f
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டாம் அலை­யின் வேகம் ஓய்ந்து வரு­வ­தைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வார காலத்­துக்கு மேலும் பல புதிய தளர்­வு­க­ளு­டன் கூடிய ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

நாளை 28ஆம் தேதி காலை முதல் ஜூலை 5ஆம் தேதி காலை வரை பல்­வேறு தளர்­வு­க­ளு­டன் இந்த ஊர­டங்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

சென்னை, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளைத் தொடர்ந்து கூடு­த­லாக மேலும் 23 மாவட்­டங்­களில் பேருந்துப் போக்கு ­வ­ரத்து, சமய வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்கு அனு­மதி, நகைக் கடை­கள், ஜவு­ளிக் கடை­கள் திறப்பு, சென்­னை­யில் பேரங்­கா­டி­க­ளைத் திறப்­ப­தற்­கு நாளை 28ஆம் தேதி முதல் அனு­ம­திக்­கப்­படும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கடந்த மே மாதம் ஒரே­நா­ளில் அதி­க­பட்­ச­மாக 36,000 பேர் கொரோனா கிரு­மிப் பர­வலால் பாதிக்­கப்­பட்­ட­னர். ஆனால், மாநில அர­சின் அதி­ரடி நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக, தற்­போது தமிழகத்தின் அனைத்து மாவட்­டங்­களிலும் கடந்த 24 மணி நேரத்தில் கிருமிப் பர­வல் 5,751 ஆக குறைந்துள்ளது.

கிருமி பாதிப்பு அதிகளவில் குறைந்­துள்ள 27 மாவட்­டங்­க­ளுக்கு இடையே 50% இருக்­கை­க­ளு­டன் குளிர்­சாதன வசதியற்ற பொதுப் போக்­கு­வ­ரத்­துக்கு அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளது.

உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், யோகா பயிற்சி நிலை­யங்­கள் 50% வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் செயல்­படவும் அருங்­காட்­சி­ய­கங்­கள் செயல்­படவும் அனு­மதி வழங்­கப்­பட்­டு உள்ளன.

கிருமி பாதிப்பு அதிகமுள்ள நீல­கிரி, கோவை, ஈரோடு, திருப்­பூர், சேலம், கரூர், மயி­லா­டு­துறை, திரு­வா­ரூர், தஞ்­சா­வூர், நாகை, நாமக்­கல் ஆகிய 11 மாவட்­டங்­களிலும் சில கூடு­தல் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன.

காலை 6 முதல் இரவு 7 மணி வரை தேநீர் கடை­களில் 'பார்­சல்' சேவைக்கு அனு­மதி தரப்பட்டுள்ளது. பாத்­திரக் கடை­கள், அழகு சாதனப் பொருட்­கள் விற்பனைக்கும் அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப் பில் பொதுவான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 11 மாவட்டங்கள் நீங்கலாக எஞ்சிய மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு 'இ-பாஸ்' அனுமதி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த முதல்வர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஆறு வீரர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

"விளையாட்டில் தொடர்ந்து ஆர்வம் காட்டினால் அமெரிக்கா போன்ற நாடுகளையும் எளிதில் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற முடியும். ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஏழு தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி.

"ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடியும் வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும் வெண்கலப் பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும்," என்று கூறினார்.