கொரோனா மாத்திரை என்று நச்சு மாத்திரை; மூவர் கொலை

ஈரோடு: ஈரோடு அருகே மாத்­திரை சாப்­பிட்டு மூவர் அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்தனர். இந்த விவ­கா­ரத்­தில் நேற்று திடீர் அதிர்ச்சித் தக­வல்­கள் வெளி­யா­யின.

கொரோனா பரி­சோ­தனை எனக்­கூறி நச்சு மாத்­திரை கொடுத்து அந்த மூவ­ரை­யும் பக்­கத்து வீட்டுக்­கா­ரரே கொலை செய்­தது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

சென்­னி­மலை அருகே அம்­மா­பா­ளை­யத்­தில் வசித்த மல்­லிகா, குப்­பம்­மாள், தீபா ஆகிய மூன்று மாதர்­களும் மாத்­தி­ரையைச் சாப்­பிட்டு பிறகு உயிர் இழந்­த­னர்,

அவர்­கள் கொலை செய்­யப்­பட்டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். மல்­லி­கா­வின் பக்­கத்து வீட்­டில் வசித்த கல்­யா­ண­சுந்­த­ரம் என்­ப­வரே இந்த படு­பா­தகச் செய­லைச் செய்து இருக்­கி­றார் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

மல்­லி­கா­வி­டம் வாங்­கிய ரூ.6.5 லட்­சம் கட­னைத் திருப்­பிக் கேட்­ட­தால் அவ­ரது குடும்­பத்­திற்கே நஞ்சு கொடுக்­கப்­பட்­ட­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

கல்­யா­ண­சுந்­த­ரம் ஏற்­பாட்­டின் பேரில் மல்­லிகா குடும்­பத்­துக்கு நச்சு மாத்­திரை கொடுத்த சபரி என்ற கல்­லூரி மாண­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

தனக்கு ஊராட்­சி­யில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி கல்­யா­ண­சுந்­த­ரம் தன்னை இந்­தக் காரி­யத்­தைச் செய்­யும்­படி கேட்­டுக்­கொண்­ட­தாக சபரி போலி­சி­டம் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.

போலிசார் கல்­யா­ண­சுந்­த­ரத்தை தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!