பொருளியல் குழு வல்லுநர்: தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம்

பொருளியல் குழு வல்லுநர்: தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம்

2 mins read
60dd78c2-9ede-415f-b676-23bb2fad07a3
டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிலை யத்தைச் சேர்ந்த ஜான் ட்ரீஸ். படம்: இணையம் -

சென்னை: இந்­தி­யா­வில் உள்ள மாநி­லங்­கள் பின்­பற்­று­வ­தற்கு ஏற்ற முன்­மா­திரி மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்­கிறது என்று தமி­ழக பொரு­ளி­யல் ஆலோ­ச­னைக் குழு உறுப்­பி­னர் ஜான் ட்ரீஸ் தெரி­வித்­தார்.

தமிழ்­நாட்­டின் பொரு­ளி­யலை மேம்­ப­டுத்த முதலமைச்­ச­ருக்­கான பொரு­ளியல் ஆலோ­சனைக் குழு உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது.

அந்தக் குழு­வில் டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்­னா­மிக்ஸ் கல்வி நிலையத்தைச் சேர்ந்த ஜான் ட்ரீஸ் உள்ளிட்ட ஐவர் இடம்பெற்­றுள்­ள­னர். பெல்­ஜி­யம் நாட்­டில் பிறந்து இந்­தியக் குடி­யு­ரிமை பெற்று கடந்த 20 ஆண்­டு­க­ளாக இந்­தியா­வில் வசிக்­கின்ற ஜான் ட்ரீஸ், மன்­மோ­கன்­ சிங் பிர­த­ம­ராக இருந்­த­போது அவ­ரது பொரு­ளியல் ஆலோ­சனைக் குழு உறுப்­பி­ன­ராக இருந்­த­வர்.

100 நாள் வேலைத் திட்­டம் மற்­றும் தக­வல் உரிமைச் சட்­டம் போன்ற திட்­டங்­க­ளுக்கு முக்­கிய ஆலோசனைகளை வழங்­கி­ய­வர் இவரே ஆவார்.

டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்­னா­மிக்­சில் கௌரவ விரி­வு­ரை­யா­ள­ராக இருக்­கும் அவர், தினத்­தந்தி செய்­தித்­தா­ளுக்­குப் பேட்டி அளித்­தார். அதில் அவர் பல கருத்­து­களைத் தெரி­வித்­துள்­ளார்.

"தமி­ழ­கத்­தில் இருந்து மற்ற மாநி­லங்­கள் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யது அதி­கம். குறிப்­பாக குழந்தை வளர்ச்சி, சுகா­தா­ரப் பாது­காப்பு, சமூகப் பாது­காப்பு உள்­ளிட்ட திட்­டங்­களில் இருந்து அதிக அம்­சங்­களைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும்.

"அதே­போல் சேவைத் துறை­யி­லும் உற்­பத்­தி­யி­லும் தமி­ழ­கம் இந்­தி­யா­வின் பொரு­ளி­யல் தலை­வனாக மாறி உள்­ளது.

"சுதந்­தி­ரம் அடைந்­த­போது இந்தி­யா­வின் ஏழ்­மை­யான மாநி­லங்­களில் ஒன்­றாக தமி­ழ­கம் இருந்­தது. ஆனால் இப்­போது தமி­ழ­கத்­தின் வளர்ச்­சியைக் காணும்­போது எனக்கு மிக­வும் வியப்பாக இருக்­கிறது.

"இந்த வெற்­றிக்கு முக்­கிய காரணம் தமி­ழ­கத்­தின் மனிதவளம் என நினைக்­கி­றேன். ஏழை மக்­க­ளுக்­கான கல்­வி­யின் மூலம் கல்வி­யின் தரம் இங்கு உயர்ந்து இருக்­கிறது," என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் வாழ்க்கைத்தரம் பல மாநிலங்களைவிட சிறந்தது என்றாலும் தமிழகத்தில் குறிப்பாக கிராமப் புறங்களில் இன்னும் ஏழை மக்கள் உள்ளதாக திரு ஜான் ட்ரீஸ் தெரிவித்து இருக்கிறார்.