கொள்ளையடித்தது எப்படி என நேரில் நடித்துக் காட்டிய திருடன்; அதிர்ந்து போன போலிசார்

கொள்ளையடித்தது எப்படி என நேரில் நடித்துக் காட்டிய திருடன்; அதிர்ந்து போன போலிசார்

1 mins read
c0a1a541-6c73-4878-92fc-524c285da45b
போலிசார் முன்னிலையில் பெரியமேடு பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் எந்த ஏடிஎம் அட்டையைக் கொடுத்தாலும் 19 விநாடிக்குள் பணத்தை எடுத்துக்காட்டும் கொள்ளையன் அமீர் அர்ஷ்.படம்: ஊடகம் -

சென்னை: ஸ்ேடட் பேங்க் ஆஃப் இந்­தி­யா­வின் (எஸ்­பிஐ) பணம் நிரப்­பும் ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் ஒரு கோடி பணத்­தைக் கொள்­ளை­ய­டித்­தது எப்­படி என கொள்­ளை­யன் அமீர் அர்ஷ் 2 மணி நேரம் நடித்­துக் காட்­டி­னான்.

எந்த ஏடி­எம் அட்­டை­யைக் கொடுத்­தா­லும் 19 விநா­டிக்­குள் நேரடி விளக்­கக் காட்­சி­யாக பணத்தை எடுத்­துக்­காட்டி போலி­சாரை அச­ர­வைத்­தான்.

இந்தக் காட்சிகளை காணொளி யாகவும் போலிசார் பதிவு செய்தனர்.

இந்­தக் கொள்­ளைச் சம்­ப­வம் தொடர்­பாக, ஏற்­கெ­னவே அமீர் அர்ஷ், வீரேந்­தர் ராவத் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்டு சிைறயில் அடைக்கப்பட்டனர்.

அமீர் அர்ஷை ஐந்து நாள் நீதி­மன்றக் காவ­லில் எடுத்து போலி­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர். அமீர் அர்ஷ், தான் உள்­பட ஒன்­பது பேர் தமி­ழ­கம் முழு­வ­தும் 21 இடங்க ளில் கொள்­ளை­யில் ஈடு­பட்­ட­தாக போலி­சா­ரி­டம் கூறியுள்ளான்.

இக்­கொள்­ளை­யில் தொடர்­பு­டைய மூன்றாவது இளையரான நசீர் உசேன், 22, என்­ப­வ­ரை­யும் போலி­சார் கைது செய்­து, சென்­னைக்கு அழைத்து வரும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். மேலும் இந்­தக் கொள்­ளை­யில் மூளை­யாகச் செயல்­பட்டு தலை­மறை­வாக உள்ள சத­கத்­வுல்­லா­கான் உள்­பட ஆறு பேரை ஹரி­யா­னா­வில் முகா­மிட்டு தனிப்படை போலிசார் தேடி வரு­கின்­ற­னர்.