ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்து கண்டுபிடிப்பு

ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்து கண்டுபிடிப்பு

1 mins read
bb11d2f0-63d1-443a-8163-bf2f6f68f9f9
சிவகளை அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட 16 முதுமக்கள் தாழிகளில் ஐந்து சேதமடையாமல் இருந்தன. படம்: ஊடகம் -

தூத்­துக்­குடி: தூத்­துக்­குடி மாவட்­டம், சிவ­க­ளை­யில் உள்ள பரம்பு பகு­தி­யில் நடை­பெற்று வரும் அக­ழாய்­வுப் பணி­யில், ஒரே குழி­யில் 16 முது­மக்­கள் தாழி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

ஒவ்­வொரு முது­மக்­கள் தாழி­யும் சுமார் இரண்டு அடி முதல் நான்கு அடி வரை உய­ரம் உள்­ளன. இவற்­றில் ஐந்து முது­மக்­கள் தாழி­கள் சேத­ம­டை­யா­மல் மூடி­யு­டன் முழுமை­ யாக உள்­ளது தெரியவந்துள்ளது.

அத்துடன், தமிழ் பிராமி எழுத்து களு­டன் கூடிய பானை ஓடு­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த திருப்­பத்­தின் கார­ண­மாக உற்­சா­கம் அடைந்­துள்ள தொல்­லி­யல் துறை­யி­னர் தொடர்ந்து அக­ழாய்­வில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இதுகுறித்து தொல்லியல் துறை யினர் கூறுகையில், "சிவகளை யில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரே குழியில் இப்போதுதான் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றை விரைவில் திறந்து பார்த்து ஆய்வு செய்யப்படும்.

"பழங்காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை அறியும் வகை யிலும் அகழாய்வுப் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை," என்று கூறினர்.

முந்­தைய காலத்­தில் இறந்­த­வர்­க­ளின் உடல்­களை வைத்து மண்­ணில் புதைக்­கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட புதை­க­லன்­கள் முது­மக்­கள் தாழி­கள் எனப்­படும். 'தாழி­யு­டன் கவிப்­போர்' என மணி­மே­கலை காப் பியத்தில் இவ்­வ­ழக்­கம் குறித்து சுட்­டிக் காட்­டப்பட்டுள்ளது.