சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் பொருட்டு, பலதரப்பட்ட மக்களும் இதுவரை ரூ.353 கோடியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை யாக அளித்துள்ளனர்.
"இந்த நிதியில் இருந்து ரூ. 100 கோடிக்கு கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ உயிர்வாயுவை வாங்கவும் மூன்றாம் அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, "மதுரையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள முன்மாதிரி திட்டம் ஒன்றை உருவாக்க உள்ளோம். தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகள், முதியோர், இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள தால் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம்," என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

