சொகுசு அறையில் ஆதாரங்கள் சிக்கின; மின்னஞ்சல் முடக்கம்

சொகுசு அறையில் ஆதாரங்கள் சிக்கின; மின்னஞ்சல் முடக்கம்

2 mins read
caf63df4-1220-4845-945e-0ce04d5b5004
-

திருப்­போ­ரூர்: பாலி­யல் வழக்­கில் கைதான சிவ­சங்­கர் பாபாவை, 73, மூன்று நாள்­கள் காவ­லில் எடுத்து விசா­ரிக்க செங்­கல்­பட்டு நீதி­மன்­றம் சிபி­சி­ஐடி போலி­சா­ருக்கு அனு­மதி வழங்­கி­யது.

இதைத்­தொ­டர்ந்து, சிவ­சங்­கர் பாபாவை கேளம்­பாக்­கத்­தில் அவர் நடத்தி வந்த சுஷில் ஹரி அனைத்­து­ல­கப் பள்ளி வளா­கத்­தில் உள்ள சொகுசு அறைக்கு அழைத்­துச் சென்று போலி­சார் விசா­ரணை செய்­த­னர்.

அப்­போது அவ­ரைக் கைதி­யாக பார்த்த பள்ளி ஆசி­ரி­யர்­கள் குரல் எழுப்பி ஆர்ப்­பாட்­டம் செய்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

சிவ­சங்­கர் பாபாவைக் காண வந்­தி­ருந்த அவ­ரது பக்­தர்­கள், சாலை­யின் இரு­பு­ற­மும் நீண்ட வரி­சை­யில் நின்று, கைதட்­டி­னர். 'சிவ­சங்­கர் பாபா மீது அபாண்­ட­மாக பழி சுமத்­தப்­பட்டு உள்­ளது' எனக் கூறிய அவர்­கள், அவரை வேனில் அழைத்­துச் செல்­லும்­போது கண்­ணீர் விட்டு அழு­த­னர்.

கிட்­டத்­தட்ட 2 மணி நேரம் சிவ­சங்­கர் பாபா விசா­ரிக்­கப்­பட்­டுள்­ளார். அவர் பயன்­ப­டுத்தி வந்த மடிக்­கணினி, 'பென் டிரைவ்', வன்­பொ­ருள் உள்­ளிட்­ட­வற்றை போலி­சார் பறி­மு­தல் செய்­த­னர்.

அதோடு, சிவ­சங்­கர் பாபா பல ஆண்­டு­க­ளாக பயன்­ப­டுத்தி வந்த மின்­னஞ்­சல் கணக்­கை­யும் ஆய்வு செய்­த­னர். அதில், மின்­னஞ்­சல் மூலம் மாண­வி­க­ளுக்கு ஆபாச தக­வல்­களை அனுப்­பிய விவ­ரத்­தை­யும் போலி­சார் கைப்­பற்­றி­னர்.

இதைத்­தொ­டர்ந்து அவ­ரது மின்­னஞ்­சல் முடக்­கப்­பட்­டது.

தனது உத­வி­யா­ள­ரின் கைபேசி மூலம் மாணவி ஒரு­வ­ரு­டன் காெணாளி வழி பேசி­ய­தற்­கான ஆதா­ரம் சிக்­கி­யுள்­ள­தா­க­வும் சிபி­சி­ஐடி போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

விசா­ர­ணை­யின்­போது தன் மீதான குற்­றச்­சாட்­டுக்கு முத­லில் மறுப்பு தெரி­வித்த சிவ­சங்­கர் பாபா, ஆதா­ரங்­க­ளைக் கைப்­பற்­றிய நிலை­யில், புகாரை ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் போலி­சார் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, மீண்­டும் அவர் புழல் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

டெல்­லி­யில் பதுங்கி இருந்த சிவ­சங்­கர் பாபாவை கடந்த 16ஆம் தேதி கைது செய்து சென்­னைக்கு போலிசார் அழைத்து வந்­த­னர்.