சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. தினமும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்களை மக்கள் பாா்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாா்வையாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் அருங்காட்சியக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதிமுதல் மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள் ஏறத்தாழ 68 நாள்க ளுக்குப் பிறகு பொது மக்களுக்குத் திறந்துவிடப்பட்டதால் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

