சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஐந்து புதிய மேம்பாலங்களைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
10,000 கி.மீ. சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க உள்ளாட்சித் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்த ஒப்படைப்புப் பணி முடிவடைந்ததும் நெடுஞ்சாலைத்துறையின் தரத்திற்கு ஏற்ப கிராமப்புறங்களில் உள்ள சாலைகளும் அமைக்கப்படும் என்றும் எ.வ.வேலு தெரிவித்தார்.

