தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக சட்டம்-ஒழுங்குக்கு முக்கியத்துவம்: டிஜிபி உறுதி

1 mins read
47342151-91c9-4751-b529-e8d223ff1ecf
-

சென்னை: தமி­ழக டிஜி­பி­யாக பொறுப்பு ஏற்­றுள்ள சைலேந்­தி­ர­பாபு, சட்­டம்-ஒழுங்­குக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும் என்று கூறி­யுள்­ளார்.

தமி­ழக காவல் துறை­யின் 30வது சட்­டம்-ஒழுங்கு டிஜி­பி­யாக சைலேந்­தி­ர­பாபு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். சென்னை காம­ரா­ஜர் சாலை­யில் உள்ள டி.ஜி.பி. அலு­வ­ல­கத்­தில் அவர் பொறுப்பு ஏற்­றுக் கொண்­டார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திரி­பாதி அவ­ருக்கு மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்­தி­னார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சைலேந்­தி­ர­பாபு, தமி­ழக காவல் துறை­யின் தலைமைப் பொறுப்­பில் பணி­யாற்­று­வது ஓர் அரிய சந்­தர்ப்­பம் என்று குறிப்­பிட்­டார். "இந்த அரிய வாய்ப்பை தந்­துள்ள முதல்­வர் ஸ்டா­லி­னுக்கு நன்றி. சட்­டம்-ஒழுங்கு பரா­ம­ரிப்­பிற்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­படும். குற்­றங்­கள் நடைபெறா­மல் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும். மக்­கள் அளிக்­கும் புகார்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். குறிப்­பாக, 'உங்­கள் தொகு­தி­யில் முதல்­வர்' திட்­டம் வாயி­லாக தரப்­படும் மனுக்­கள் மீது 30 நாட்­க­ளுக்­குள் விசா­ரித்து முடிவு காணப்­பட்டு அர­சுக்கு அறிக்கை அளிக்­கப்­படும். பொது மக்­க­ளி­டம், போலி­சார் மனி­தா­பி­மா­னத்­து­டன் நடந்து கொள்ள வேண்­டும். மனித உரி­மை­களை மதித்து நடக்க வேண்­டும். போலி­சா­ருக்கு அதற்­கான பயிற்சி அளிக்­கப்­படும், " என்று திரு சைலேந்­தி­ர­பாபு கூறி­னார்.