ஆசிரியம் கல்வெட்டுகள், 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண்டை ஓடு கண்டெடுப்பு

ஆசிரியம் கல்வெட்டுகள், 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண்டை ஓடு கண்டெடுப்பு

2 mins read
adde19c2-0f7b-4e02-a224-62d9c11cfe91
புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம் வட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 'ஆசிரியம்' கல்வெட்டுகளில் ஒன்று. வலது படம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கொத்தகையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடு. படம்: ஊடகம் -

புதுக்கோட்டை: தமி­ழ­கம் முழு­வ­தும் தொல்­லி­யல் ஆய்வு நடை­பெற்று வரும் நிலை­யில், புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் மூன்று இடங்­களில் 'ஆசி­ரி­யம்' கல்­வெட்­டு­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அங்­குள்ள திரு­ம­யம் வட்­டத்­தைச் சேர்ந்த தேவர்­மலை, மேலப்­பனை­யூர், செவ­லூ­ரில் நடத்­தப்­பட்ட ஆய்­வின்­போது இக்­கல்­வெட்­டு­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

13ஆம் நூற்­றாண்­டில் வணி­கர்­க­ளுக்­கும் அவர்­கள் கொண்டு செல்­லும் பொருள்­க­ளுக்­கும் பாது­காப்பு அளிப்­ப­தற்­காக பல பாது­கா­வ­லர்­கள் நிய­மிக்­கப்­பட்­ட­னர் என்­றும் இந்த பாது­கா­வல் பணி குறித்து அறி­விக்­கவே 'ஆசி­ரி­யம்' கல்­வெட்­டு­கள் பொறிக்­கப்­பட்­ட­தா­க­வும் சொல்­கி­றார் இந்த தொல்­லி­யல் ஆய்­வுக்குத் தலைமை ஏற்­றுள்ள தொல்­லி­யல் ஆய்­வுக் கழக நிறுவனர் ஆ.மணி­கண்­டன்.

"புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் 13ஆம் நூற்­றாண்­டில் நிலை­யான, ஒருங்­கி­ணைந்த ஆட்­சி­முறை மறை­யத் தொடங்­கிய சூழ­லில் அதிக நிலம் படைத்­த­வர்­கள் குறு­நில மன்­னர்களாக செயல்­பட்டு வந்­துள்­ள­னர். இவர்­கள் தமது நிர்­வா­கத்­துக்கு உட்­பட்ட மக்­க­ளுக்­கும் அவர்­க­ளின் உடை­மை­க­ளுக்­கும் வெளி­யூ­ரில் இருந்து வணி­கம் செய்­யும் வணி­கர், வணி­கப் பொருள்­க­ளுக்­கும் உரிய பாது­காப்­பா­ளர்­களை நிய­மித்­த­னர்," என்று மணி­கண்­டன் தெரி­வித்­துள்­ளார்.

மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட 'ஆசி­ரி­யம்' கல்­வெட்­டு­கள் திரு­ம­யம் வட்­டத்­தில் தேவர்­மலை, மேலப்­ப­னை­யூர், மலை­ய­டிப்­பட்டி ஆகிய இடங்­க­ளி­லும் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக குறிப்­பி­டும் அவர், அவை அனைத்­துமே ஓர் ஊரையோ கோவி­லையோ நிர்­வ­கிப்­ப­வர்­க­ளைப் பற்­றிய விவ­ரங்­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார். 'ஆசி­ரி­யம்' என்ற தமிழ்ச்­சொல் சங்­கப்­பா­டல்­க­ளி­லும் காணப்­ப­டு­வ­தால் இதை சமசு­கி­ருத சொல்­லாக மட்­டுமே கரு­தக்­கூ­டாது என்­றும் மணி­கண்­டன் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, சென்­னி­மலையை அடுத்த கொடு­ம­ணல் பகு­தி­யில் நடந்த அக­ழாய்­வின்­போது 2,300 ஆண்­டு­க­ளுக்கு முன்பு பொது­மக்­கள் பயன்­ப­டுத்­திய படிக்­கட்­டு­டன் கூடிய கிணறு கண்­டு­பிடிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அக­ழாய்­வில் மூன்று வகை­யான, பெருங்­கற்­கால ஈமச்­சின்­னம் எனப்­படும் கல்­ல­றை­க­ளைக் கண்­டு­பி­டித்­துள்­ள­தா­க­வும் அவற்­றுள் ஒரு கல்­ல­றை­யில் மனி­த மண்டை ஓடு உள்­ளது என்­றும் தொல்­லி­யல்­துறை திட்ட இயக்­கு­நர் ஜெ.ரஞ்­சித் தெரி­வித்­துள்­ளார்.

அந்த மண்டை ஓடு மர­பணு பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட உள்­ளது. கொடு­ம­ணல் அக­ழாய்­வில் 662 உடைந்த பல வகை­யான வளை­யல்­களும் 343 கல்­ம­ணி­களும் இரும்பு, கண்­ணாடி, ஆணி­கள், உளி, கத்தி போன்ற இரும்­பி­னால் தயார் செய்த 193 பொருள்­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் இப்­பொ­ருள்­கள் அனைத்­தும் சுமார் 2,300 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வாழ்ந்த மனி­தர்­கள் பயன்­படுத்­தி­யவை என்­றும் ஜெ.ரஞ்­சித் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் சிவ­கங்கை மாவட்­டம் திருப்­பு­வ­னம் அருகே கொந்­த­கை­யில் நடை­பெ­றும் அக­ழாய்­வில் மேலும் ஒரு மனித எலும்­புக்­கூடு கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. மூன்று அடி நீள­முள்ள அந்த எலும்­புக்­கூடு விரை­வில் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.