சென்னை: கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வருகை தரும், புறப்பட்டுச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளது. அேதபோல், பயணிகளின் எண்ணிக்கையும் 12,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. அதிலும், சென்னையில் இருந்து செல்லும் பயணிகளைவிட சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கிருமித்தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பயணிகள் எண்ணிக்கையும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. கடந்த 1, 2, 3ஆம் தேதிகளில் மட்டும் சராசரியாக 120 விமானங்கள் சேவை வழங்கி வருகின்றன.