தேனி: தேனியில் போலிஸ்காரர் ஒருவரின் தந்தைக்கு ஒரே நேரத்தில் இரு முறை தடுப்பூசி போடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தடுப்பூசி போட்டுக் கொண்டவர், தேனி காவல் நிலை யத்தில் புகார் ெகாடுத்துள்ளார்.
இதையடுத்து, போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி கோட்டைக்களம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 65. இவர் அங்கிருந்த தடுப்பூசி மையத்துக்கு இரண்டாவது தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி போடுவதற்காக வந்திருந்தார்.
இதையடுத்து, அவருடைய ஆதார் விவரங்களைச் சரிபார்த்து விட்டு தாதி ஒருவர் 2வது தவணை தடுப்பூசியைச் செலுத்தினார். அவரை சிறிது நேரம் காத்திருந்து செல்லும்படி தாதி கூறினார்.
இதனால் அவர் அப்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு தாதி மீண்டும் அவருக்கு தடுப்பூசி போட்டார். இதையடுத்து அவர் தனக்கு சில நிமிடத்துக்கு முன்புதான் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறினார்.
தாதியரின் கவனக்குறைவால் ஒரே நேரத்தில் சந்திரசேகருக்கு இருமுறை தடுப்பூசி போடப்பட்ட சம்பவத்தால் மருத்துவக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கூடுதலாக தடுப்பூசி போட்டதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சந்திரசேகரிடம் மருத்துவக் குழுவினர் விளக்கம் அளித்தனர்.
எனினும் சந்திரசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

