தமிழகத்தில் 3,590 பேருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு

தமிழகத்தில் 3,590 பேருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு

2 mins read
fccfd010-7f44-4b46-aaa2-bc5ef8235c2f
தொற்றுப் பரவல் குறைந்திருப்ப தால் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட் டுள்ளன.இதையடுத்து சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் கடற்கரையில் இளையர்கள் சிலர் பல நாட்களுக்குப் பிறகுகைப்பந்து விளையாடு கின்றனர். படம்: ஈபிஏ -

கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

சென்னை: தமி­ழ­கத்­தில் 3,590 பேருக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்­புள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மாநில சுகா­தார அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், பூஞ்சை நோய்க்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டால் உட­ன­டி­யாக அரசு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று மருத்­துவ ஆலோ­சனை பெற வேண்­டும் எனக் கேட்­டுக் கொண்­டார்.

"தமி­ழ­கத்­தில் பல்­வேறு பகு­தி­களில் கறுப்­புப் பூஞ்சை நோயால் பலர் பாதிக்­க­ப்பட்­டுள்­ள­னர். சென்­னை­யில் உள்ள ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வக்­கல்­லூ­ரி­யில் கறுப்­புப் பூஞ்சை நோய் தாக்­கிய 778 பேர் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

"அவர்­களில் 26 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பிய நிலை­யில், 456 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

கொரோனா நிலவரம்

இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று முன்தினம் 3,211 பேருக்கு புதிதாக கொரோனா கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது.

ஒரே நாளில் மேலும் 57 பேர் கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். இத­னால் ஒட்­டு­மொத்த மரண எண்­ணிக்கை 33,253ஆக கூடி­யுள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் தற்­போது 33,665 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லை­யில், கேர­ளா­வில் தொற்­றுப்­ப­ர­வல் மீண்­டும் அதி­க­ரித்து வரு­வ­தை­யொட்டி தமி­ழக எல்­லைப் பகு­தி­களில் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

கேர­ளா­வில் இருந்து தொற்று பாதிப்பு உள்­ள­வர்­கள் கோவை, தேனி, கன்­னி­யா­கு­மரி எல்­லைப் பகு­தி­கள் வழி­யாக தமி­ழ­கத்­துக்­குள் நுழைந்­து­வி­டா­த­படி தீவிர நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று பொது சுகா­தா­ரத்­துறை இயக்­கு­நர் செல்வ விநா­ய­கம் தெரி­வித்­துள்­ளார்.

கேர­ளா­வில் இருந்து தொற்று அறி­கு­றி­க­ளு­டன் வரு­ப­வர்­க­ளுக்கு தமி­ழ­கத்­தில் நுழைய அனு­மதி மறுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மாநி­லத்­தின் அனைத்து எல்­லை­க­ளி­லும் மருத்­து­வக் குழு­வி­னர் சிறப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, நெல்­லை­யில் கொரோனா தடுப்­பூ­சிக்கு பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­து. தடுப்­பூசி மையங்­களில் நீண்ட நேரம் காத்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­ய­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.