தூத்துக்குடி: மறைந்த முன்னாள் முதல்வர் ெஜயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று கோவில்பட்டி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தது முதல், எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்றுள்ள அதிமுக தலைவர்கள் தினந்தோறும் சசிகலாவால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன் தலைமையில் நடந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட அதிமுகவின் அனைத்து நிர்வாகிகள், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி கள் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.
அப்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைக் கட்சியை விட்டு நீக்கி வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் அடிப்படை விதிகளுக்கு மாறாக இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை கட்சியைவிட்டு நீக்க தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவும் கோவில்பட்டி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.