தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக, பாஜக கூட்டணி நீடிக்க அண்ணாமலை விருப்பம்

2 mins read
a4fdc616-8081-4f19-9bda-623d4c1fc12a
-

சென்னை: அதி­முக, பாஜக இடை­யே­யான தோழமை மேலும் வள­ர­வேண்­டும் என தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து இரு கட்­சி­க­ளுக்­கும் இடையே நில­வி­வ­ரும் கருத்து வேறு­பா­டு­கள் தொடர்­பான சல­சலப்பு சற்றே குறைந்­துள்­ளது.

சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­குப் பிறகு தமி­ழக பாஜக தலை­வ­ராக இருந்த எல். முரு­கன் மத்­திய அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இதை­ய­டுத்து அக்­கட்­சி­யின் மாநில துணைத் தலை­வ­ராக இருந்த முன்­னாள் காவல்­துறை அதி­காரி அண்­ணா­மலை புதிய தலை­வ­ராகி உள்­ளார். அவ­ருக்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் வாழ்த்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

அதி­முக சார்­பில் அக்­கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் பன்­னீர்­செல்­வ­மும் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் வாழ்த்து தெரி­வித்­த­னர்.

இதற்கு நன்றி தெரி­வித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அண்­ணா­மலை, அதி­முக, பாஜக இடை­யே­யான தோழமை இன்­று­போல் என்­றும் வள­ர­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­குப் பிறகு அதி­முக, பாஜக இரண்­டாம் மட்­டத்­தி­லான தலை­வர்­க­ளி­டையே கருத்து வேறு­பா­டு­கள் அதி­க­ரித்து வரு­கின்றன.

பாஜ­க­வு­டன் கூட்­டணி வைத்­ததே தேர்­தல் தோல்­விக்­குக் கார­ணம் என அதி­முக முன்­னாள் அமைச்­சர் சி.வி.சண்­மு­கம் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார். இதற்கு பாஜக தரப்­பில் பதி­லடி கொடுக்­கப்­பட்­டது.

இரு­த­ரப்­பில் இருந்­தும் சில சூடான அறிக்­கை­கள் வெளி­யா­கின. இதை­ய­டுத்து பாஜ­க­வு­டன் கூட்­டணி தொட­ரும் என அதி­முக தலைமை அறி­வித்­தது. இந்­நி­லை­யில் அண்­ணா­ம­லை­யும் இக்­கூட்­டணி தொட­ர­வேண்­டும் என விருப்­பம் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் இளை­யர்­களை அதிக அள­வில் கட்­சி­யில் சேர்க்­க­வேண்­டும் என பாஜக மேலி­டம் அறி­வு­றுத்தி இருப்­ப­தா­கத் தக­வல்.

அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க புதிய தலை­வர் அண்­ணா­மலை திட்­ட­மிட்டு வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.