தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மது போதை காரணமாக துக்க வீடாக மாறிய திருமண வீடு

1 mins read
442265b1-97b1-46dc-9dac-9d18681aa467
மகன் திரு­ம­ணத்­துக்­கான வேலை­களை செய்­து­கொண்­டி­ருந்த இளங்­கோ­வன், அதே மகனை கொலை செய்ததால்­வாடிப்­பட்டி காவல் நிலை­யத்தில் சர­ண­டைந்­தார்.படம்: ஊடகம் -

மதுரை: மது போைதக்கு அடி­மை­யான தனது மகனை எவ்­வ­ளவு சொல்­லி­யும் திருத்தமுடி­யாத நிலை­யில், மக­னைக் கொன்ற தந்தை வாடிப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதனால், கடந்த 11ஆம் ேததி அன்று திரு­ம­ணம் நடை­பெற இருந்த வீடு துக்கவீடாக மாறிய தால், திரு­மண வீடு கண்­ணீ­ரும் கத­று­லு­மாக மாறி­யது.

மதுரை மாவட்­டம், வாடிப்­பட்டி அரு­கே­யுள்ள அய்­ய­ன­க­வுண்­டன் பட்­டி­யைச் சேர்ந்த தொழி­லாளி இளங்­கோ­வ­ன். இவரது மகன் பிர­தீப்­புக்­கும் உசி­லம்­பட்டியைச் சேர்ந்த பெண்­ணுக்­கும் திரு­ம­ணம் நடக்க இருந்­தது.

திரு­மண வேலை­களில் இளங்­கோ­வன் குடும்­பத்­தி­னர் ஈடு­பட்டு வந்­துள்­ள­னர்.

அப்போது, மது குடித்­து­விட்டு நிதானமில்­லா­மல் வீட்­டுக்குத் திரும்பிய மண­ம­கன் பிர­தீப், தன் நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து மீண்­டும் மது அருந்த தந்தை இளங்­கோ­வ­னி­டம் பணம் கேட்­டுள்­ளார்.

"நாளைக்கு திரு­ம­ணத்தை வைத்­துக்கொண்டு இப்­படி அசிங்­கப்­ப­டுத்­து­கி­றாயே!" என்று தந்தை கடு­மை­யா­கத் திட்­டி­யுள்­ளார்.

"பணம் தர­வில்­லை­யென்­றால் திரு­ம­ணம் செய்யமாட்­டேன்," என்று இளங்­கோ­வனுடன் வாக்­கு­வா­தம் செய்துள்ளார் பிர­தீப்.

இரு­வ­ரும் மாறி மாறி தாக்­கிக்­கொண்ட நிலை­யில், அருகில் இருந்த கோட­ரியை எடுத்து இளங்­கோ­வன் வெட்­டி­ய­தில் பிர­தீப்­ மர­ண­ம­டைந்­தார்.

"தமி­ழக அரசு மதுக்­க­டை­களை மூடவேண்­டும். அதி­லும் கொரோனா ஊர­டங்கு காலத்­தில் வரு­மா­னம் இல்­லா­மல் இருக்­கும் பல குடும்­பங்­க­ளின் நிம்­ம­தியை மது அழிக்­கிறது. பல்­வேறு குற்­றங்­கள் நடை­பெற மதுவே கார­ண­மாக உள்­ளது," என்று நாட்டை காப்­போம் அமைப்­பின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் சி.ஜே.ராஜன் கூறியுள்ளார்.

-