சென்னையில் ஓர் உயிரிழப்பும் இல்லை 139 நாட்களுக்குப் பிறகு திரும்பிய நிம்மதி

சென்னையில் ஓர் உயிரிழப்பும் இல்லை 139 நாட்களுக்குப் பிறகு திரும்பிய நிம்மதி

2 mins read
1dedf691-78ae-4f4b-9c05-a96661ca16dc
-

சென்னை: தலை­ந­கர் சென்­னை­யில் கடந்த 24 மணி நேரத்­தில் (11ஆம் தேதி) கொரோனா கார­ண­மாக ஒரு­வர் கூட உயி­ரி­ழக்­க­வில்லை என்­றும் இது ஒரு பெரிய சாத­னை­தான் என்­றும் தமிழக சுகா­தா­ரத்­துறை கூறியுள்­ளது.

கடை­சி­யாக கடந்த பிப்­ர­வரி மாதம் 23ஆம் தேதி­தான் சென்­னை­யில் கொரோனா உயி­ரி­ழப்­பு­பூஜ்­ஜி­ய­மாக இருந்­தது. அந்த நிலைமை இப்­போ­து ஏறத்­தாழ 139 நாட்­க­ளுக்­குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ளதாக சுகா­தார அதி­கா­ரி­கள் குறிப்பிட்டுள்­ள­னர்.

மாநிலத்தில் கொரோனா இரண்­டாம் அலை கடந்த ஏப்­ரல் மாதம் ஏற்­பட்டபோது, கிரு­மித் தொற்­றால் தினமும் 35,000 பேர் வரை பாதிக்­கப்­பட்­ட­னர்.

இதைத்­தொ­டர்ந்து, ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­, தடுப்­பூசி போடும் பணி­யைத் துரி­தப்­ப­டுத்­து­வது உள்ளிட்ட அதி­ரடி நட­வ­டிக்­கைகளை தமிழக அரசு எடுத்ததன் காரணமாக பெரும்­பா­லான மாவட்­டங்­களில் கிருமி பாதிப்பு வெகு­வா­கக் குறைந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், தமிழ்­நாட்­டில் 51வது நாளாக இப்பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரு­கிறது.

கடந்த 24 மணி நேரத்­தில் மாநி­லத்­தில் 2,775 பேருக்கு மட்­டுமே கிருமி பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இவர்களில் சென்­னை­யைச் சேர்ந்தோர் 171 பேர்.

முதல் அலை­யி­லும் சரி, இரண்­டாம் அலை­யி­லும் சரி கொவிட்-19 தாக்­கத்­தால் சென்­னை மோசமாகப் ­பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையில் கடந்த மே மாதம் 12ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 7,564 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

கடந்த மே 5ஆம் தேதி அன்று 107 பேர் அதிகபட்சமாக சென்னை யில் மட்டும் உயிரிழந்த நிலையில், அதன்­பின்­னர் இந்தப் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்­தது.

இந்­நி­லை­யில், மாநி­லத்­தில் கடந்த 24 மணி­நே­ரத்­தில் கொரோ­னா­வால் இறந்த 47 பேரில் ஒரு­வர் கூட சென்­னை­யில் இல்லை. இது­வரை தமிழகத்தில் 33,418 பேர் தொற்றால் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இப்­போது கோவை மாவட்­டத்­தில் 298 பேருக்­கும் தஞ்­சா­வூ­ரில் 210 பேருக்­கும் இப்­பா­திப்பு உறுதி யாகி உள்­ளது. இந்த இரு மாவட்­டங்­களில் மட்­டும்­தான் கிருமி பாதிப்பு 200க்கு மேல் உள்­ளது என தகவல்கள் கூறியுள்ளன.