தமிழகம்-புதுச்சேரிக்கு இடையே பேருந்துச் சேவையைத் தொடங்கி வைத்த தமிழக அரசு தொடரும் தளர்வு, கட்டுப்பாடு

தமிழகம்-புதுச்சேரிக்கு இடையே பேருந்துச் சேவையைத் தொடங்கி வைத்த தமிழக அரசு தொடரும் தளர்வு, கட்டுப்பாடு

2 mins read
af95b129-b676-4d99-b564-1437c64444c6
சென்னை தியாகராய நகரில் துணிக் கடைகள், நகைக்கடைகள் மட்டுமின்றி, நடைபாதைக் கடைகளும் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொருள் வாங்கும் ஆர்வத்தில் திரண்டிருந்த பலரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க மறந்தனர். படம்: இபிஏ -

சென்னை: தமி­ழ­கத்­தில் தளர்வு களு­டன் கூடிய ஊர­டங்கு மீண்­டும் ஒரு வாரத்­திற்கு நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளதை அடுத்து, யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சே­ரிக்கு பேருந்­து­கள் செல்­வ­தற்கு அனு­மதி அளித்து முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

ஏறக்­கு­றைய 70 நாள்­க­ளுக்­குப் பிறகு நேற்று காலையில் இருந்து தமி­ழ­கத்­தில் இருந்து புது­வைக்­கும் புது­வை­யில் இருந்து தமி­ழ­கத்­துக்­கும் பேருந்துப் போக்­கு­வ­ரத்து தொடங்­கி­ய­தால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்­தனர்.

முகக்­க­வ­சம் அணிந்­தும் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்­தும் பேருந்­து­களில் மக்­கள் பய­ணம் செய்­த­னர்.

தமி­ழ­கத்­தில் கிரு­மிப் பர­வல் நாள்தோறும் ஒடுங்கி வரும் நிலை­யில், புதிய ஊர­டங்குத் தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் வரும் 19ஆம் தேதி வரை நீட்­டிக்கப்பட்டுள்ளது.

அனு­மதி நீட்டிப்பு

 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­படுத்­தும் வித­மாக திரு­மண நிகழ்­வு­களில் 50 பேரும் இறு­திச் சடங்­கு­களில் 20 பேரும் மட்­டுமே அனு­மதிக்­கப்­ப­டு­வர்.

 நோய் கட்­டுப்­பாட்டுப் பகு­தி­கள் தவிர அனைத்துப் பகு­தி­க­ளி­லும் ஏற்­கெனவே அனு­ம­தி அளிக்­கப்­பட்­டுள்ள பணியைத் தொடரலாம்.

 உண­வ­கங்­கள், தேநீர்க் கடை­கள், நடை­பா­தைக் கடை­கள் உள்­ளிட்ட கடை­கள் 50% வாடிக்கையாளர்­களு­டன் இரவு 9 மணி வரை செயல்­படலாம்.

 மத்­திய, மாநில அர­சு­க­ளின் வேலை­வாய்ப்பு தொடர்­பான எழுத்­துத் தேர்­வு­களை நடத்தவும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

தொடரும் தடை, கட்டுப்பாடு

 திரை­ய­ரங்­கு­க­ளைத் திறப்­ப­தற்கு அனு­மதி வழங்கப்படவில்லை.

 மதுக்­ கூ­டங்­கள், சமு­தாய, அர­சி­யல் கூட்­டங்­கள், கலை, கலா­சார நிகழ்­வு­க­ளை நடத்த தடை தொடர்­கிறது.

 பள்­ளி­, கல்­லூ­ரி­கள், கல்வி நிறு­வ­னங்­கள், உயி­ரி­யல் பூங்­காக்­கள்;

 அனைத்­து­லக விமானப் போக்கு­வ­ரத்து;

 நீச்­சல் குளங்­களைத் திறப்­பதற்குத் தடை தொடர்­கிறது.

 பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணிவது, தனி மனித இடை­வெ­ளியைப் பின்­பற்­று­வது அவ­சி­யம்.

கொரோனா கட்­டுப்­பாட்டு வழி­முறை­களை மீறு­வோர்க்கு அப­ரா­தம் விதித்து, நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்று தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.