சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
அதன்படி, "கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
"மேகதாது அணை விவ காரத்தில் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்கவேண்டும்.
"அணை கட்டுவதற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை அனைத்துக் கட்சி களும் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்," எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே மணி (படம்), செய்தியாளர் களிடம் கூறுகையில், "தமிழகத்தின் உரிமையைக் காப்பதில் மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. அனைத்துக் கட்சிக் குழுவினரும் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்திப்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது," என்றார்.

