சென்னை: சென்னையைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் தண்ணீர் குடிக்கும்போது, தனக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கைப் பல்லை விழுங்கியதால் உயிரிழந்தார்.
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 48, என்பவரின் மனைவி ராஜலட்சுமி, 43. இவர் கடந்த வாரம் பல் மருத்துவமனையில் புதிதாக மூன்று செயற்கை பற்களைக் கட்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் தண்ணீர் குடிக்கும்போது மூன்று பற்களில் ஒரு பல் கழண்டு வயிற்றுக்குள் சென்றுள்ளது.
இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

