நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

2 mins read
09e34b92-3380-4d45-84f5-e108e2cd307f
-

சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி விதிப்­ப­தற்குத் தடை விதிக்­கும்­படி கோரிய நடி­கர் விஜய்க்கு ஒரு லட்­சம் ரூபாய் அப­ரா­தம் விதித்­துள்­ளது சென்னை உயர் நீதி­மன்­றம்.

இந்த அப­ரா­தத் தொகையை முதல்­வ­ரின் பொது நிவா­ரண நிதிக்கு இரண்டு வார காலத்­தில் செலுத்­து­வ­தற்­கும் விஜய்க்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

நடி­கர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்­கி­லாந்­தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை இறக்­கு­மதி செய்­துள்­ளார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி வணிக வரித் துறை உதவி ஆணை­யர் உத்­த­ரவு பிறப்­பித்­தார்.

இந்த உத்­த­ரவை எதிர்த்­தும் நுழைவு வரியில் இருந்து தடை கோரியும் நடி­கர் விஜய் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

இந்த வழக்கை விசா­ரித்த நீதி­பதி எஸ்.எம்.சுப்­ர­ம­ணி­யம், "புகழ்­பெற்ற சினிமா நடி­கர்­கள் முறை­யாக, உரிய நேரத்­தில் வரி செலுத்­த­வேண்­டும். இந்த வரி வரு­மா­னம்­தான் ஒரு நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தின் முது­கெ­லும்பு," என்று குறிப்­பிட்­டார்.

"வரி என்­பது கட்­டா­ய­மாக வழங்­க­வேண்­டிய பங்­க­ளிப்பு தானே தவிர, தானாக வழங்­கக்­கூ­டிய நன்­கொடை அல்ல. வரி­ஏய்ப்பு என்­பது ஒரு தேசத் துரோ­கம்," என்றும் காட்­ட­மா­கப் பேசி­னார்.

மக்­கள் செலுத்­தக்­கூ­டிய வரி பள்­ளி­கள், மருத்­து­வ­ம­னை­கள் உள்­ளிட்ட நலத் திட்­டங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கக் கூறி­ய­வர், கதா­நா­ய­கர்­கள் ஒரு உண்­மை­யான நாய­கன்­க­ளாக இருக்­க­வேண்­டுமே தவிர 'ரீல்' நாய­கன்­களாக இருக்­கக் கூடாது என்­றும் நீதி­பதி அறி­வு­றுத்­தி உள்ளார்.

நாடாளும் அளவிற்கு நடிகர்கள் வளர்ந்துள்ள தமிழ்நாட்டில், கதாநாயகர்கள் உண்மையான நாயகன்களாக இருக்கவேண்டுமே தவிர, கதைவிடும் நாயகன்களாக இருக்கக்கூடாது.

உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்