35 மயில்களை நஞ்சு வைத்து விவசாயி கொன்றது அம்பலம்

35 மயில்களை நஞ்சு வைத்து விவசாயி கொன்றது அம்பலம்

2 mins read
90504e87-7d67-455d-837a-a31d8fdf0551
-

திருப்­பூர்: பொல்­லி­கா­ளி­பா­ளை­யம் அருகே 35 மயில்­க­ளுக்கு நஞ்சு வைத்து விவ­சாயி ஒரு­வர் கொன்­றுள்­ளது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, விவ­சாயி மீது வன உயி­ரி­னப் பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

திருப்­பூர் மாவட்­டம், பொல்லி காளி­பா­ளை­யம் பகு­தி­யில் உள்ள விவ­சா­யத் தோட்­டத்­தில் கடந்த 9ஆம் தேதி அன்று அதிர்ச்சி அளிக்­கும் விதத்­தில் மொத்­தம் 35 மயில்­கள் இறந்து கிடந்­தன.

இத­னைக் கண்டு அதிர்ந்த மக்­கள் வனத் துறை­யி­ன­ருக்­குத் தக­வல் தெரி­வித்­த­னர்.

இதைத்­தொ­டர்ந்து அரசு கால்­நடை மருத்­து­வர் வர­வ­ழைக்­கப்­பட்டு, இறந்த மயில்­க­ளின் மாதி­ரி­கள் சேக­ரிக்­கப்­பட்டு ஆய்­வுக்கு அனுப்­பி வைக்கப்பட்டது.

அதன்­பின்­னர், இறந்த மயில் கள் அங்­கேயே குழி தோண்டி எரி­யூட்­டப்­பட்­டன.

அதன்­பின்­னர் அம­ரா­வதி வனத் துறை அலு­வ­ல­கத்­தில் இருந்து டிக்ஸி என்ற மோப்ப நாயை அழைத்து வந்து இத்­தனை மயில்­களும் ஒரே நேரத்­தில் இறந்­த­தற்­கான கார­ணம் குறித்து துப்பு கிடைக்­கி­ற­தா எனத் தேடி­னர்.

அப்­போது மயில்­கள் இறந்து கிடந்த இடத்­தில் இருந்து ஒரு­ விவசாயியின் தோட்­டம் வரை டிக்ஸி நாய் வேக­மாக ஓடி­யது.

அங்கு ஒரு மயில் உயி­ருக்­குப் போரா­டிக்­கொண்­டி­ருந்­தது. அந்த இடத்­தில் டிக்ஸியும் நின்­று­விட்­டது.

இதைத்­தொ­டர்ந்து அங்கிருந்த தோட்­டத்­தைக் குத்­த­கைக்கு எடுத்து விவ­சா­யம் செய்து வரும் விவ­சாயி ஒரு­வ­ரி­டம் போலி­சார் விசா­ரணை நடத்­தி­னர்.

அவ­ரது தோட்­டத்­திற்கு வரும் ஏராளமான மயில்­கள் விவ­சாய விதை­களைத் தின்­று­விட்டு செல்­வ­தால் நஷ்­டம் ஏற்­ப­டு­வ­தாகக் கருதி மயில்­கள் உண்­ணும் உண­வில் விஷம் கலந்து போட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

அதனை சாப்­பிட்ட மயில்­கள் மயங்கி விழுந்து இறந்­தது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.