சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது உறுதியானது. அத்துடன், 48 பேர் உயிரிழந்தனர்.
மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு தற்போது வெகுவாக தணிந்து வரு கிறது.
இந்நிலையில், இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 139,113 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,505 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
"3,058 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்பால் 48 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 33,502 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 160 பேருக்கும் செங்கல்பட்டில் 135 பேருக்கும் கோயம்புத்தூரில் 282 பேருக்கும் ஈரோட்டில் 187 பேருக்கும் இப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 31,218 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மக்கள் தொகைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி ஒதுக்காததால் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசியை வழங்கவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

