சென்னை: அரசு நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டங்களையும் பார்க்கும்போது இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பது தெளிவாகிறது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
தன் உடல் மொழியாலும் நகைச் சுவை உணர்வாலும் அனைவரையும் கவர்ந்தவரான நடிகர் வடிவேலு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர் களைச் சந்தித்த வடிவேலு, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பாணியிலேயே பதில் அளித்தார்.
"அதிகமான படங்களில் இனி என்னைப் பார்க்கலாமா எனக் கேட்கிறீர்கள். திரைப்படங்களிலும் ஓடிடியிலும் நான் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. கண்டிப்பாக, நல்லதே நடக்கும்," என்றார்.
முதல்வரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, "முதல்வரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். மிகவும் எளிமை யாக, நம் குடும்பத்தில் உள்ள ஒருவர் போல் என்னிடம் அவர் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் நன்கொடை கொடுத்தேன்.
"முதல்வரின் ஆட்சி பொற்கால மான ஆட்சி. பெண்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளனர். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் சிறப்பு.
"மக்களைத் தன்வசப்படுத்தி, அவர்களைத் தடுப்பூசி போட வைத்துள்ளார் ஸ்டாலின். அவர் எத்தனை ஊசி போடச் சொன்னா லும் நான் போடுவேன். 40 ஊசி போடச் சொன்னாலும் போடுவேன்.
"நான் இரண்டு முறை தடுப்பூசி போட்டுவிட்ேடன். மக்கள் அனை வரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற ஊசியைத் தவிர வேறு வழியில்லை.
இதையடுத்து கொங்கு நாடு குறித்த கேள்விக்கு, "தமிழ கத்தில் ஏற்கெனவே ராம்நாடு, ஒரத்த நாடு என பல உள்ளன. இதில் கொங்கு நாடு, அந்த நாடு, இந்த நாடு என்பது ஏன்? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை பிரிக்கத் தேவையில்லை," என தனது பாணியில் கிண்டல் அடித்துவிட்டுச் சென்றார்.
ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் உள்ளன. இவ்வளவு நாட்டையும் பிரிக்கமுடியுமா? இவற்றைப் பிரித்தால் அவ்வளவுதான்.
நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை எதற்குப் பிரிக்க வேண்டும்? இவற்றை எல்லாம் கேட்கும்போதே தலைசுற்றுகிறது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு

