ஆயிரக்கணக்காேனார் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தகவல் சட்டவிரோதக் குடியேறிகளைப் பிடிக்க போலிஸ் வலைவிரிப்பு

ஆயிரக்கணக்காேனார் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தகவல் சட்டவிரோதக் குடியேறிகளைப் பிடிக்க போலிஸ் வலைவிரிப்பு

2 mins read
c54977a7-9a67-4da0-bd67-de97396ecd7f
தமிழகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருவதால் சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது. வாகனச் சோத­னை­யின் போதும் திடீர் சோதனைகளின் போதும் இவர்­கள் உரிய ஆவ­ணங்­களைக் கொடுப்பதால் அவர்­கள் மீது சந்­தே­கம் எழ­வில்லை என போலிசார் தெரி­வித்­து உள்­ள­னர். படம்: ஊடகம் -

சென்னை: மேற்கு வங்க மாநி­லத் தைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான வங்­க­தே­சக் குடி­யே­றி­கள் தமிழ கத்­தில் சட்­ட­வி­ரோ­த­மா­கத் தங்கி இருப்­பது போலி­சா­ரின் கவ­னத்­துக்குத் தெரி­ய­வந்­துள்­ளது.

ஆதார் அட்­டை­க­ளு­டன் தமிழ கத்­தில் அடைக்­க­லம் புகுந்­துள்ள அவர்­க­ளைப் பிடிக்க போலி­சார் வலை­வி­ரித்­துள்­ள­தா­க­வும் தக­வல் கள் தெரி­வித்­துள்­ளன.

இவர்­கள் உள்­நாட்­டுப் பாது காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக இருப்­பதை அடுத்து, இந்த சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்­ட­றி­யும் பணி­யில் போலி­சார் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ள­னர்.

அண்­மை­யில் மேற்கு வங்­கத்­தி­னர் எனக் கூறிக்­கொண்டு ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பங்ளாதேஷ் குடி­யே­றி­கள் தமி­ழ­கத்­திற்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்­துள்­ள­னர்.

இவர்­கள் சில இடைத்­த­ர­கர்­க­ளின் உத­வி­யு­டன் தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களி­லும் தங்­கி­யுள்­ள­னர் என்­றும் தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பை பெற்­றுக்கொண்­டுள்­ள­னர் என்­றும் கூறப்­படுகிறது.

திருப்­பூர், செங்­கல்­பட்டு, ஈரோடு, கட­லூர், காஞ்­சி­பு­ரம் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் மேற்கு வங்­கத்­தில் இருந்து வேலைக்­காக வந்­துள்ள தாகக் கூறி பங்ளாதே­சத்­தி­னர் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யி­ருப்­பது போலி­சா­ரின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர ஊர­டங்கு உத்­த­ரவு மாநி­லம் எங்­கும் நடப்­புக்கு வந்­த­போது, வட­மா­நி­லத்­த­வர்­களில் பெரும்­பா­லா­னோர் வேலை­யின்றி தங்­கள் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அவ­ர­வ­ரும் தங்­கள் சொந்த மாநி­லங்­க­ளுக்­குத் திரும்­பிச் சென்ற நிலை­யில், இந்த பங்ளாதேஷ் குடி­யே­றி­கள் மட்­டும் சொந்த ஊருக்­குத் திரும்­பிச் செல்­ல­வில்லை.

கொரோனா நெருக்­கடி கால கட்­டத்­தில் இவர்­கள் சட்­ட­வி­ரோ­தச் செயல்­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

தான் ஓர் இந்­தி­யக் குடி­ம­கன் என்­பதை நிரூ­பிக்க இவர்­க­ளி­டம் உரிய ஆவ­ணங்­கள் இல்­லா­விடி லும் ஆதார் அட்­டை வைத்துள்ள னர். போலி­ ஆவ­ணங்­க­ளைக் கொடுத்து இந்த அட்­டை­க­ளைப் பெற்­றனரா என்­பது குறித்து போலி­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

இந்த ஆதார் அட்­டையை வைத்து இதர அடை­யாள அட்­டை­கள், வங்­கிக் கணக்­கு­க­ளைத் திறக்­க­வும் இவர்­கள் முக­வரி சான்று அளித்­துள்­ள­னர். இந்த சட்­ட­வி­ரோதக் குடி­யே­றி­க­ளைக் கண்­ட­றி­யும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.