மருந்தின் வரியை ரத்து செய்தது மத்திய அரசு

மருந்தின் வரியை ரத்து செய்தது மத்திய அரசு

1 mins read
eefb5a80-ef2e-4776-8165-246cca431542
-

நாமக்­கல்: தமி­ழக சிறுமி மித்­ரா­வின் சிகிச்­சைக்­காக வெளி­நாட்­டி­லி­ருந்து கொண்டு வரப்­படும் மருந்­துக்­கான வரியை ரத்து செய்து மத்­திய நிதியமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

நாமக்­கல் மாவட்­டம், குமார பாளை­யம் பகு­தி­யில் வசித்து வரும் சதீஷ்-பிரி­ய­தர்­ஷினி தம்­ப­தி­ய­ரின் மகள் மித்ரா, 2. (படம்)

அண்­மை­யில் மித்­ரா­வுக்கு உடல்­ந­லக் குறைவு ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து அவரை மருத்­துவ மனை­யில் அனு­ம­தித்­த­போது குழந்­தைக்கு தண்­டு­வட சிதைவு நோய் இருப்­பது கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது.

இதற்­கான தடுப்பு மருந்து சுவிட்­சர்­லாந்­தில் தயா­ரிக்­கப்­படுகிறது. அதை வாங்க ரூ.16 கோடி தேவைப்­பட்ட நிலை­யில் சமூக வலைத்­தளங்­கள் மூல­மாக நிதியளிக்க பெற் றோர் கோரிக்கை விடுத்தனர்.

பலர் தாரா­ள­மாக நிதி அளித்த தைத் தொடர்ந்து, குழந்­தைக்கு மருந்து வாங்குவதற்­கான பணம் கிடைத்­துள்­ளது. ஆனால், மருந்தை இந்­தி­யா­விற்­குள் கொண்­டு­வர ரூ.6 கோடி இறக்­கு­மதி வரி உள்­ள­தால் மருந்தை வாங்குவதில் சிக்­கல் இருந்துவந்­தது.

இது­கு­றித்து பல­ரும் மத்­திய அர­சுக்கு வரிச் சலுகை வழங்க கோரிக்கை விடுத்­தி­ருந்த நிலை­யில், முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னும் கடி­தம் எழு­தி­யி­ருந்­தார்.