சென்னை: அவசர காலத்தில் உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள், தாதியர், மருத்துவப் பணியாளர்களுக்கு கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்வழி, மூன்றாம் அலை தொற்றை சமாளிக்க அம்மருத்துவ மனை தயாராகி வருகிறது.
இதுகுறித்து இம்மருத்துவமனையின் இயக்குநர் நாராயணசாமி கூறுகையில், "இந்த மருத்துவமனையில் இந்த ஆண்டில் இதுவரை 20,289 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். அவர்களில் 18,932 பேர், அதாவது 97% மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மூன்றாம் அலையால் குழந்தை கள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சமாளிக்க, குழந்தைகளுக்கான 100 சிகிச்சை பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ளன. எனவே, குழந்தை களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் மருத்துவர்கள், தாதி யருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

