புதுடெல்லி: கொரோனா இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யவும் மூன்றாம் அலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்கட்டமாக ரூ.800 கோடியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்ட்வியா விடுவிப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று தமிழக மருத்து வத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தி யாளா்களிடம் கூறியபோது, "மத்திய அமைச்சா் மன்சுக் மாண்ட்வியாவை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அளித்தேன். தமிழகத்தில் ஆறு கோடி பேருக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது. இவா்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த 12 கோடி தடுப்பூசி தேவைப்படும்.
"எனவே கூடுதலாக தமிழகத்துக்கு தடுப்பூசி தேவை என வலியுறுத்தினேன். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர் தமிழகத்தின் தேவையைப் பூா்த்தி செய்வதாகவும் உறுதியளித்தாா்.
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும் ஜப்பான் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும்," என்றும் அவர் தெரி வித்ததாகவும் கூறினார்.

