அவிநாசி: தான் திமுகவில் இணைவதாகப் பரவும் தகவல் தவறானது என்றும் தான் என்றென்றும் அதிமுகவின் விசுவாசிதான் என்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
கொங்கு மண்டலத்தில் தனது கொடியை நாட்டவேண்டும் என திமுக வலுவாக காய் நகர்த்தி வருகிறது. அதற்கான முயற்சியிலும் இறங்கி உள்ளது.
ஏற்கெனவே அமமுக பழனி யப்பன், அதிமுக தோப்பு வெங்கடா சலம், மநீம மகேந்திரன் உள்ளிட் டோர் திமுகவுக்கு வந்துவிட்டனர்.
இந்தப் பட்டியலில் முன்னாள் சபாநாயகரும் அவிநாசி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான தனபாலும் இணையப் போவதாக தகவல் பரவியது.
இந்நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"நான் திமுகவில் இணைவ தாக தவறான தகவல் பரவி வருவது கண்டனத்துக்குரியது. அது உண்மையல்ல. 1972ல் அதிமுகவை எம்ஜிஆர் துவங்கியபோது என் மாணவப் பருவத்தில் இருந்தே அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
"என்து 45 ஆண்டு கால அர சியல் வரலாறு குறித்து அறியாத வர்கள் வதந்தியைப் பரப்பி விட்டுள்ளனர். என் வாழ்க்கை அமைதியானது. எந்த சூழ்நிலையிலும் எந்தவொரு மாற்றத்தையும் விரும்பாதவன் நான். அதிமுகவில் ஏழு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன். அமைச்சர், துணை சபாநாயகர், சபாநாயகர் என பல வாய்ப்புகளை அக்கட்சி வழங்கியது. ஜெயலலிதாதான் எனக்கு அத்தனை பதவிகளையும் வழங்கினார். அதிமுக என்னை நன்றாக வைத்திருக்கிறது; பெருமைப்படுத்தி இருக்கிறது. எனவே, கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன்," என்று கூறியுள்ளார்.

