திராவிடக் கட்சிகள் திகைப்பதாக தகவல்

திராவிடக் கட்சிகள் திகைப்பதாக தகவல்

1 mins read
23a75b87-0167-43fc-9cda-f5c35ba5634b
-

சென்னை: தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­ம­லைக்கு அக்­கட்­சி­யி­னர் கொடுத்த வர­வேற்­பும் அவரை வாழ்த்தி ஒட்­டப்­பட்ட பிரம்­மாண்ட சுவ­ரொட்­டி­களும் திமுக-அதி­முக உள்­ளிட்ட திரா­வி­டக் கட்­சி­களை திகைக்க வைத்­துள்­ள­தாக தின­ம­லர் இணை­யச் செய்தி தெரி­வித்­துள்­ளது. "சென்னை தி.நக­ரிலுள்ள பாஜக அலு­வ­ல­க­மான கம­லா­ல­யம் அமைந்­துள்ள சாலை­யில் வாழை மரம், தோர­ணம் கட்டி மேள­தா­ளம் முழங்க வர­வேற்பு அளிக்­கப்­பட்­ட­து. திமுக, அதி­முக பொதுக்­குழு, செயற்­குழு போன்ற முக்­கிய நிகழ்ச்­சி­க­ளின்­போது ஆளு­மை­மிக்க தலை­வர்­க­ளாக இருந்த கரு­ணா­நிதி, ஜெய­ல­லி­தா­வுக்கு அளித்தது போன்று பாஜ­க­வி­னர், அண்­ணா­ம­லைக்கு வர­வேற்பு அளித்தனர்," என அச்செய்தி கூறியது.