மகன் அமைச்சர்; பெற்றோர்
கூலித் தொழிலாளிகள்
நாமக்கல்: மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் எல். முருகனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோனூர் என்னும் குக்கிராமம். இவரது மனைவி கலையரசி மருத்துவராக இருக்கிறார். இரு மகன்களுடன் இவர்கள் சென்னையில் வசிக்கும் அதேவேளை வருதம்மாள், லோக நாதன் என்னும் முருகனின் பெற்றோர் அவர் களின் கிராமத்தில் இன்னும் விவசாயக்கூலி களாக வேலைக்குச் செல்கிறார்கள். "மகன் அமைச்சர் என்பதால் என்னுடைய உழைக்கும் குணத்தை மாற்றமுடியாது," என்று
லோகநாதன் தெரிவித்துள்ளார்.
ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. பயணம்: இளையரின் கண்டுபிடிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள பக்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பாஸ்கரன் (33). இயந்திரப் பொறியியல் டிப்ளமோ படித்துள்ளார். வாழும் காலத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், பழைய இரும்புச் சாமான்கள் கடைக்குச் சென்று பழைய சைக்கிள் ஒன்றை ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கி வந்து அதில் மின் மோட்டார், பேட்டரி, கண்ட்ரோலர் என ரூ.18 ஆயிரம் செலவிலான கருவிகளைப் பொருத்தி மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார். "இந்த மின்சார சைக்கிளில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்த ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. வரை செல்லலாம். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. சைக்கிளின் பெடல்களை மிதித்து தொடர்ந்து இயக்கலாம்," என்று பாஸ்கரன் கூறுகிறார்.
பதாகை வைக்கும் திமுகவினர்
மீது நடவடிக்கை: தலைமை எச்சரிக்கை
சென்னை: பதாகை (பேனர்) வைக்கும் கலாசாரத்தைக் கைவிடாத திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். "பெரும்பாலான திமுகவினர் பதாகைகள் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டாலும் ஒரு சிலர் அதனை தொடர்ந்து செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட 'பேனர்' கலாசாரத்தால் மரணங்களும் விபத்துகளும் நிகழ்ந்தன," என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
சென்னை மக்கள் முகக்கவசம் அணிவது 47 விழுக்காடாக அதிகரிப்பு
சென்னை: சென்னையில் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிராக முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது. முகக்கவசம் அணிந்து கொள்வோர் விகிதம் குடிசைப் பகுதிகளில் 41 விழுக்காடாகவும் மற்ற பகுதிகளில் 47 விழுக்காடா கவும் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் குடிசைப் பகுதிகளில் 21 விழுக்காடாகவும் இதர பகுதிகளில்
27 விழுக்காடாகவும் இதன் விகிதம் இருந்தது. சென்னையில் உள்ள 64 தெருக்களில் சுமார் 4,500 பேரிடம் நான்கு கட்டங்களாக ஆய்வு நடத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் சுகாதார நிபுணர் பிரப்தீப் கோர் கூறினார்.

