முகக்கவசம் அணியவில்லை: 101 நாள்களில் 1.8 மில்லியன் பேருக்கு அபராதம்

முகக்கவசம் அணியவில்லை: 101 நாள்களில் 1.8 மில்லியன் பேருக்கு அபராதம்

1 mins read
f37381fb-4672-4491-b91f-1d2617572059
-

சென்னை: தமி­ழ­கத்­தில் முகக்­கவசம் அணி­யாத குற்­றத்­துக்­காக கடந்த 101 நாள்­களில் மட்­டும் சுமார் 1.8 மில்­லி­யன் பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதே கால­கட்­டத்­தில் தனி­ம­னித இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கா­த­தற்­காக 88,836 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

கொரோனா தொற்­றுப் பரவலைத் தடுக்க மத்­திய, மாநில அர­சு­கள் தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. எனி­னும் அவ்­வப்­போது பல ஊர­டங்குத் தளர்வு­களும் அறி­விக்­கப்­ப­டு­கின்றன.

மேலும், முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­கள், தனி மனித இடை­வெ­ளியை கடை­ப்பி­டிக்­கா­த­வர்­கள் மீது வழக்குப் பதிவு செய்­யப்­ப­டு­வ­து­டன் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டு­கிறது.

அந்த வகை­யில் கடந்த ஏப்­ரல் 8ஆம் தேதி­யில் இருந்து இந்த நட­வ­டிக்கை மேலும் தீவி­ர­ம­டைந்­தது. அன்று தொடங்கி நடப்பு ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை­யி­லான 101 நாள்­களில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் முகக்­க­வ­சம் அணி­யா­மல் போலி­சாரி­டம் சிக்­கி­யுள்­ள­னர். இது­வரை 1.8 மில்­லி­யன் பேருக்கு 200 ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

இதே­போல தனி­ம­னித இடை­வெளி­யைக் கடை­ப்பி­டிக்­காத 88,836 பேர் மீது வழக்­குப் பதி­வா­னது.

சிறு கடைக்­கா­ரர்­கள், பொது ­இடங்­களில் கூட்­ட­மாக நின்­ற­வர்­கள் மீது­தான் அதிக எண்­ணிக்­கை­யில் வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

இனி இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் தொடர்ந்து இத்தவறுகளைச் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் எச்சரித்துள்ளனர்.

சுகாதாரத்துறையும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.