இரவு மது விருந்து: துணை நடிகை உட்பட 16 பேர் கைது

இரவு மது விருந்து: துணை நடிகை உட்பட 16 பேர் கைது

1 mins read
ce2896c5-0a82-4b59-b042-d4fc2badcab1
-

சென்னை: கிழக்­குக் கடற்­கரை சாலை­யில் உள்ள பண்ணை வீட்டில் மது விருந்து நடத்­திய துணை நடிகை கவி­தாஸ்ரீ உள்­பட 16 மீது போலி­சார் கொரோனா வழி­காட்டி நெறி­மு­றை­களை மீதி­ய­தாக வழக்குப் பதிவு செய்­துள்­ள­னர்.

நள்­ளி­ரவு வேளை­யில் அந்­தப் பண்ணை வீட்­டில் அரை­குறை ஆடை­யில் சில பெண்­கள் நடன­மா­டு­வ­தா­க­வும் அனை­வ­ரும் மது அருந்­து­வ­தா­க­வும் கிடைத்த தகவலை அடுத்து போலி­சார் அங்கு விரைந்­த­னர்.

சம்­பவ இடத்­தில் இருந்­த­வர்­க­ளி­டம் விசா­ரித்­த­போது, ராம­நா­த­பு­ரத்­தைச் சேர்ந்த 34 வய­தான ஸ்ரீஜித்­கு­மார் என்­ப­வர் திரைப்­படத் துணை நடிகை கவிதா ஸ்ரீயு­டன் சேர்ந்து மது விருந்­துக்கு ஏற்­பாடு செய்­தது தெரி­ய­வந்­தது.

1994 ஆம் ஆண்டு வெளி­வந்த 'காத­லன்' படத்­தில் முரட்டு காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­த­வர் கவி­தாஸ்ரீ.

அக்குறிப்பிட்ட பண்ணை வீட்டை வாட­கைக்கு எடுத்து கடந்த இரண்டு மாதங்­க­ளாக அவர் மது விருந்­து­களை தொடர்ந்து நடத்தி வந்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நட­ன­மாட பத்து பெண்­கள், உயர் ரக மது வகை­கள், அசைவ உணவு என ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த அந்த விருந்து நிகழ்­வில் பங்­கேற்­ற­வர்­களி­டம் தலா ஐந்­தா­யி­ரம் ரூபாய் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­பட்­டதும் தெரியவந்துள்ளது.